Wednesday, December 19, 2012

நட்பா....? உறவா...?


உணவருந்த காகமானேன்
உணவருந்தி நாயானேன்
காகம் போல் ஒற்றுமையும் 
நாயை போல் நன்றியும் 
நட்பதில் அல்லால் 
பெற்றுவிட்டால் சொல்லிவிடு
                                                               - ரூபன்
காலத்தின் கட்டாயத்தில் இலைமறை காய்கள் ஆக்கப்பட்டவர்கள். ஒருவன் உயர்ந்தால் மட்டும் அனைப்பதற்கெண்டு ஒரு கூட்டம் உண்டு உறவுகளாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தன்நிலை மறவாது ஒரு சமூகம் இருக்கும் “நட்பு” .

இது ஒருவனுடைய எல்லாப்பரிமாண வளர்ச்சியிலும் செல்வாக்கு செலுத்தினாலும் ஒரு தனிமனிதன் குடும்பஸ்தன் ஆகும் வரைக்குமே அதிகளவு ஆதிக்கம் செலுத்துகின்றது. அதாவது ஒருவன் நல்ல நிலையினை அடையும் அடையும் வரையிலேயே செல்வாக்கு செலுத்துகின்றது. அதன் பின்பு ஒவ்வொருவனுடைய வாழ்க்கையிலும் உறவினர் என்னும் மாயை மேகம் சேர்ந்து கொள்கிறது. ஒருவரின் வளர்ச்சிக்கு காரணமான நண்பர் கூட்டம் ஓரங்கட்டப்படுகிறது.

               “ எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் 
                      மண்ணில் பிறக்கையிலே -அது
                 நல்லவனாவதும் தீயவனாவதும் 
                       அன்னை வளர்ப்பதிலே”
எனக்கு இந்த வரிகளில் உடன்பாடில்லை. ஏனெனில் நடத்தைகள் மாறப்படுவது அல்லது மாற்றப்படுவது  அவு ஜௌவப்புவத்ில். இந்த ிலையில் அவன் உறுகள் மத்ியில் இருப்பைவிடண்பர்கள் மத்ியில் இருப்புவே அிம். ஆக ஒருவன் நல்லன் ஆவீயன் ஆவும் அவுடைய ேர்க்கையிலேயே செல்வாக்கு செலத்ுகிறு. 

ஒருவன் நாசமாக போனால் நண்பர்களை வறுத்தெடுக்கு உலகம் அதே ஒருவன் நல்லநிலையில் இருக்கும் போது நட்புவட்டத்தை சுட்டிக்காட்ட மறந்துவிடுகிறது. இந்த நிலையில் அவன் உறவுகளைப் புகழ்கிறது. எந்தவிதத்தில் இது நியாயம் ???

அண்மையில் பங்குபற்றிய ஒரு பட்டிமன்றத்தில் இதே தலைப்பு முன்வைக்கப்பட்டது. அதில் உறவுகள் அணிக்கே வெற்றித்தீர்ப்பு வழங்க்கப்பட்டது. வெட்டி வாதிடும் தன்மை நண்பர் அணிக்கு இருக்கவில்லை. ஆதல்லால் வந்த நிலை.அதுவே என்னை இந்தப் பதிவினை எழுதத் தூண்டியது.

அவ்விடத்தில் வாதாட நான் இருந்திருந்தால் கேட்டிருப்பேன் பல கேள்விகளை........

அங்கு முன்வைக்கப்பட்ட கருத்து “ என்ன தான் நண்பன் என்றாலும் அவனை மச்சான் எண்டு தானே கூப்பிடுறீங்க..இதில இருந்து விளங்கலயா உறவுதான் சிறந்ததெண்டு.... இவ் விவாதத்திற்கு பலத்த கரகோசம்..இது தேவையில்லை..”
  
நண்பன் என்பவன் “ நான் ஆனவன்”.. இப்படி இருக்கும் போது மச்சான் என்று கூப்பிடுவது உறவுக்கான ஏற்பாடல்ல.. அப்பிடி கூப்பிடிறாங்க எண்டதுக்காக அவன் அப்பா, அம்மா .. மாமா, மாமி ஆகிட முடியுமா??? இவை விதண்டாவாதம். கூப்பிடுவதை வைத்து உறவுதான் சிறந்ததல்ல. 

புராணங்களிலும் சரி இதிகாசங்களிலும் சரி நண்பனால் உயர்ந்தவனை சொல்லியிருக்கிறார்களே தவிர தாழ்ந்தவன் என்று சொன்னவர்கள் குறைவு. 

உறவுகள் தன்னுயிர் காக்க ஓடிப்போயின. ஆனால் நட்பு தன்னுயிரையே மாய்த்தது. ராமாயணம் , மகாபாரதத்தில் கண்ட உண்மை. நண்பன் உயிர் காத்தான் கண்ணன். நண்பனுக்காக உறவையே எதிர்த்தான் கர்ணன். வளர்த்த அண்ணை விட்டு ஓடினான் விபீசனன். ஊராரின் சந்தேகத்திற்கு தன் மனைவியையே காட்டில் விட்டான் இராமன்.பச்சிளம் பாலகனை ஆற்றில் விட்டாள் குந்தி...இப்படி புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
 
தன் காமவேட்க்கையை தீர்த்துக்கொள்ள பெற்ற பிள்ளையையே காமுறும் தந்தை.. சகோதரிகளைக் காமுறும் சகோதரர்கள். உறவினர் வீட்டில் பாதுகாப்பிற்கு விடப்படும் பிள்ளைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள். இப்படியான கீழ்த்தரமான வக்கிர புத்திகளைக் கொண்டவர்களைப் பற்றி பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். இப்படியான துர்நடத்தைகளை நண்பர்களிடம் காண முடியாது.

பெற்ற பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களையும் பாத்திருக்கிறோம். அதேவேளை நண்பர்களை தம் செலவில் படிக்க வைக்கும் நண்பர்களையும் கண்டிருக்கிறோம். பெயருக்காக உதவி செய்பவர்கள் உறவினவர்கள். செய்த உதவிகளை மேடை போட்டுக்காட்டுபவர்கள். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள். ஒருவனை உயர்ந்த இடத்தில் ஏற்றிவைத்து அழகு பார்ப்பது நட்பு மட்டுமே..(இங்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் அம்மா என்ற உறவை இதில் இணைப்பது அழகல்ல. அது எல்லைகள் கடந்தது. எதிர்பார்ப்பு அற்றது. தன்நலன் கருதாதது. என்னைப் பொறுத்தவரை அம்மா என்ற தன்னிகரற்ற தெய்வத்தை விவாதங்களில் சேர்த்துக்கொள்வது ஏற்புடையது அல்ல என்றே கருதுகிறேன்.)

பச்சோந்தி உலகில் போலி மனிதர் ராஜாங்கம்
செத்துப்போன மனச்சாட்சியுடன் சிரித்து திரியும் மனிதர்கள்
சில்லறை எண்ணங்களுடன் சிறிய வட்டத்துள்
சிம்மாச இருப்பிற்காய் வீணீர் வடிக்கும் கூட்டம் நடுவே 
வெறுப்புக்களை சகஜமாக்கி
பிரிவுகளை தொடர்கதையாக்கலாம?
பதில் தெரியாத வினாவுடன் - என்றும்
பதைபதைக்கும் ஒரு உறவு நட்பு.
                                                                      - ரூபன்
  

மேல்மட்டத்தில் இருப்பவனையே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் உறவு. எப்போதும் தாழ்வாக இருப்பதையே விரும்பும் நட்பு. காரணம் அதற்கு தான் தெரியும் உறுதி என்பது கீழே தான் அதிகம் என்று. 
                                           தாழும் போது விட்டுச்சென்ற உறவு
எழும்போது எட்டிப்பிடிக்கிறதே
விழுப்போது கைகொடுத்த உன்னை ஒதுக்கிவிட்டு .

                                                           “ உணர்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும்”




இப்பதிவு பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். விமர்சனங்களை கீழேயுள்ள இடுக்கைகளில் இட்டுக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களும் வரவேற்க்கப்படுகிறது.
- இ.சுகானன்



Sunday, October 14, 2012

பெண்களின் நட்சத்திர பலன்கள்..


பெண்களின் நட்சத்திர பலன்கள்............



ஜென்ம நட்சத்திரத்தை வைத்துப் பெண்களின் குணாதிசயங்களைக் கணிக்க முடியும்.
1.அசுவினி: கவர்ச்சியானவர்கள். கனிவானவர்கள். சுத்தமானவர்கள். காம வேட்கை, கடவுள் பக்தி அதிகமிருக்கும்.
2.பரணி: சுத்தமில்லாதவர்கள். சண்டைகளை விரும்புபவர்கள். வஞ்சகம் மிக்கவர்கள். திரை மறைவில் தீமை புரிபவர்கள்.
3.கிருத்திகை: கொள்கைப் பிடிப்பற்றவர். கோபம் அதிகமிருக்கும். சண்டை போடுபவர்கள். சுற்றத்தை வெறுப்பவர்கள்.
4.ரோகிணி: செல்வம் படைத்தவர்கள். அழகானவர்கள். மூத்தோரை மதிப்பவர்கள்.
5.மிருகசிரிடம்: சுகாதாரமானவர்கள். அழகானவர்கள். ஆடை, ஆபரண யோகம் பெற்றவர்கள். தரும காரியங்களில் ஈடு பாடு உடையவர்.
6.திருவாதிரை: குரோத குணமும், நய வஞ்சகமும் படைத்தவர்கள். ஆத்திரம் மிக்கவர்கள். வீண் செலவு செய்பவர்கள்.
7.புனர்பூசம்: பண்பானவர்கள். அடக்க மானவர்கள். அழகும், லட்சணமும் மிக்க கணவரைப் பெறுவார்கள். சுய கவுரவம் படைத்தவர்கள்.
8.பூசம்: வீடு, நிலம், வாகனம் ஆகிய வளங்களைப் படைத்தவர்கள். அழகானவர்கள்.
9 ஆயில்யம்: அழுது ஆர்ப்பரிப்பவர். ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுபவர். விசுவாசமில்லாதவர்கள். ரகசியம் காக்கத் தெரியாதவர்கள்.
10.பூரம்: சந்தோஷ சல்லாபம் மிக்கவர். செல்வாக்கு மிக்கவர். நீதி நெறி வழி நடப்பவர். தைரியமானவர்கள்.
11.உத்திரம்: சரச சல்லாபத்தை அனுபவிப்பவர். ஒழுக்கமானவர்கள்.
12.அஸ்தம்: சுகபோகமாக வாழ்வார்கள். கவர்ச்சியானவர்கள். நுண்கலை வல்லுநர்கள்.
13.சித்திரை: வனப்பும், வசீகரமும் உடையவர்கள். அழகானவர்கள்.
14.சுவாதி: ஒழுக்கமானவர், நல்லோர் நட்பைப் பெற்றவர். எதிர்ப்பை வெல்லும் குணமுடையோர்.
15.விசாகம்: சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப் பவர். அறிவாற்றல் மிக்கவர்கள்.
16.அனுஷம்: தியாக குணம் படைத்தவர்கள். பொதுச் சேவையில் நாட்டம் உடையவர்கள்.
17.கேட்டை: சத்திய நெறி காப்பவர். சந்தோஷமானவர்கள். சுற்றத்தாரை நேசிப்பவர்.
18.மூலம்: குரோதமானவர்கள். வெறுப்பும், விகற்பமும் மிக்கவர்கள்.
19.பூராடம்: குடும்பத்தில் சிறந்தவர்கள். அதிகார அந்தஸ்து மிக்கவர்கள்.
20.உத்திராடம்: பேரும், புகழும் மிக்கவர்கள். சந்தோஷமும், சல்லாபமும் அனுபவிப்பவர்கள். உல்லாசவாசிகள்.
21.திருவோணம்: பிறருக்குச் சேவை செய்பவர்கள். நம்பிக் கையும், நேர்மையும் மிக்கவர்கள். இரக்க மனம் படைத்தவர்கள்.
22.அவிட்டம்: சகல சவுபாக்கியங்களையும் பெற்றவர்கள். பெருந் தன்மையானவர்கள். கருணை மிக்கவர்கள். நேர்மையானவர்கள்.
23.சதயம்: பிற பெண்களை நேசிப்பவர்கள். சுற்றத்தாரால் விரும்பப்படுபவர்கள். கலகலப் பாக இருப்பவர்கள்.
24.பூரட்டாதி: சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள். அறிவானவர்கள். கல்வி மற்றும் கலைகளில் வல்லவர்கள்.
25.உத்திரட்டாதி: பாசமானவர்கள். அறிவும், ஆற்றலும் மிக்கவர்கள். உண்மையை விரும்புபவர்கள்.
26.ரேவதி: சம்பிரதாயங்களை மதிப்பவர்கள். கட்டுத்திட்டங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நேசம் மிக்கவர்கள்.
27.மகம்: ஆசார, அனுஷடானங்களை அனுசரிப்பவர்கள். பாசம் மிக்கவர்கள்.

 நன்றி - இணையம்

Wednesday, September 19, 2012

விநாயகர்.......................!

விநாயகரை கரைப்பது ஏன்?
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

குட்டு என்றால் என்ன?
விநாயகர் முன்னால் நின்று குட்டுகிறோம் அல்லவா! குட்டு என்பது தமிழ்ச்சொல் அல்ல. இந்த கன்னடச் சொல்லுக்கு ரகசியம், மர்மம், புதிர் என்று பொருள். மறைத்து வைத்த விஷயம் வெளிப்படும் போது குட்டு உடைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு. வியாசர் பாரதக்கதையைச் சொல்லச்சொல்ல விநாயகர் எழுதினார். அவரது எழுதும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத வியாசர், இடையிடையே சிக்கலான ஸ்லோகங்களைச் சொல்லி விநாயகரை யோசனையில் ஆழ்த்தினார். அந்த ஸ்லோகங்களுக்கு பாரத குட்டு என்று பெயர். அந்த நேரத்தைப் பயன்படுத்தி அடுத்த ஸ்லோகங்களைச் சொல்ல தன்னைத் தயார்படுத்திக் கொள்வார் வியாசர். விநாயகனே! நான் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்திருக்கலாம். அந்தக் குட்டு (ரகசியம்) உடையாமல், என் தன்மானத்தைக் காப்பாற்று, என்ற பொருளிலும் தலையில் குட்டி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள்.

முதன் முதலில் தோப்புக்கரணம் போட்டவர்
தோப்புக்கரணம் என்ற சொல் தோர்பிகரணம் என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து ஏற்பட்டது. தமிழில் ஒன்றைக் குறிப்பதை ஒருமை என்றும், ஒன்றுக்கு மேற்பட்டதை பன்மை என்றும் கூறுகிறோம். சமஸ்கிருதத்தில் ஏகவசனம், த்வி வசனம், பஹு வசனம் என்று மூன்றாக இதைப் பிரித்துள்ளனர். ஏகவசனம் என்பது ஒன்று. த்வி வசனம் என்பது இரண்டு. பஹு வசனம் என்றால் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பது. கை என்பதை சமஸ்கிருதத்தில் தோஸ் என்பர். தோஷா என்றால் ஒரு கை. தோர்ப்யாம் என்றால் இரண்டு கைகள். மனிதனுக்கு மட்டுமே இரண்டு கைகள். தெய்வங்கள், தேவர்களுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகள் உண்டு. அப்படியானால், தோப்புக்கரணத்தை தோர்ப்யாம் கர்ணம் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், தோர்பி என்ற சொல்லுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் என்று பொருள். அப்படியானால், நான்கு கைகளையுடைய திருமால் தான் முதன்முதலில் தன் மருமகனான விநாயகருக்கு காதுகளை மாற்றிப்பிடித்து தோப்புக்கரணம் போட்டு வேடிக்கை காட்டி சிரிக்க வைத்தார்.

நமக்கு கிடைத்த பாக்கியம்
கலாசாரத்தில் பாஷை மிக முக்யம். அதை வைத்துத்தானே சமய சம்பந்தமான நூல்கள், அறிவை வளர்த்துக் கொள்ளும் நூல்கள், மனசுக்கு விருப்பமான மற்ற கதை, கவிதை, காவ்யம் எல்லாமே? அப்படியிருக்கப்பட்ட தமிழ் பாஷைக்கு விக்னேச்வரர் ரொம்ப முக்யம். எது ஒன்று எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு சாமான் லிஸ்ட் எழுதினால் கூட சரி, முதலில் என்ன பண்ணுகிறோம்? பிள்ளையார்சுழி என்று தானே போடுகிறோம். எடுத்துக் கொண்ட கார்யம் சுழித்துப் போகாமல் ரக்ஷித்துக் கொடுப்பதற்காக முதலில் பிள்ளையார்சுழி! பிள்ளையார்சுழி என்ற அர்த்தத்தில், ஸம்ஸ்கிருதம் உள்பட இந்ததேச பாஷைகளில் வேறே எதிலும் இப்படி மங்களாரம்ப ஸிம்பலாக ஒன்று இல்லை. இது நம் தமிழ்மொழியின் பாக்யம். பிள்ளையாருக்கென்று ஏகப்பட்ட கோயில்கள் கட்டி வைத்திருப்பதும் தமிழ்நாட்டில் தான். வேறு எந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு பிள்ளையாருக்குத் தான் மூலைக்கு மூலைகோயில்! காணபத்யத்துக்கு (விநாயகர் வழிபாட்டிற்கு) மகாராஷ்டிரம் தான் ராஜதானி(தலைநகர்) என்று சொல்வார்கள். ஆனால், கோயில் கணக்குப் பார்த்தால் அது, தமிழ் நாட்டுக்கு ரொம்பவும் பின்தங்கி எங்கேயோ தான் நிற்கும். -காஞ்சிபெரியவர்

விநாயகரின் திருமணம்
பிரம்ம தேவனுக்கு புத்தி, சித்தி இரண்டு புத்திரிகள் இருந்தனர். பிரம்ம தேவர் அவர்களை விநாயகருக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். உடனே அவர் நாரதரைக் கூப்பிட்டு விஷயத்தைக் கூறி விநாயகரிடம் தூது அனுப்பினார். நாரதரும் விநாயகரிடம் சென்று தன் இயல்பான கலகமூட்டும் வேலையைச் செய்யாமல் ஒழுங்காக வந்த விஷயத்தைக் கூறினார். பிள்ளையாரும் மணமுடிக்க சம்மதித்தார். நாரதர் நேராகச் சென்று விஷயத்தை பிரம்மனிடம் கூறிவிட்டார். பிரம்மனும் முறைப்படி சிவபெருமானையும் பார்வதியையும் பார்த்து விஷயத்தைக் கூறவே அவர்களும் தங்களது சம்மதத்தைத் தெரிவித்து விட்டனர். திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. விஸ்வகர்மா (தேவதச்சன்) திருமணத்துக்கு என்று சொர்க்க லோகத்தை விட சிறப்பான ஒரு நகரத்தை நிர்மாணித்தான். திருமணத்தைக் காண அனைத்து லோகங்களிலிருந்தும் கூட்டம் கூடிவிட்டது. அவர்களின் பசியைத் தணிக்க காமதேனு அவர்களுக்கு உணவு அளித்துக் கொண்டே இருந்தது. திருமண நாளும் வந்தது. சித்திக்கு லட்சுமி தேவியும், புத்திக்கு இந்திராணியும் அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். நூறாயிரம் கோடி தேவர்கள் மந்திரம் முழங்க சித்தி, புத்தி இருவரின் கழுத்திலும் விநாயகர் மங்கள நாண் பூட்டினார்.

விநாயகரின் பெண்வடிவம்
விநாயகரின் பெண் வடிவமே விநாயகி. யானைமுகம், கழுத்துக்குக் கீழ் பெண் வடிவம், 12 கரங்கள், 3 கண்கள் கொண்டு, தலையில் பிறைசூடி, நாகாபரணம் தரித்துக் காணப்படும் இந்த விநாயகியை வணங்கி வந்தால் கலை ஞானம், அறிவு ஆகியவைகள் கிட்டும்.

பூமியில் சிறந்த பூ எந்த பூ?

விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம்பூ. இதனை அர்க்க புஷ்பம் என்பர். அர்க் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எருக்கு என்று பொருள். விநாயகரைப் போலவே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்தது. சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயருண்டு. சூரியனார் கோயிலின் தலவிருட்சம் கூட எருக்கஞ்செடி தான். எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவித்தால் விக்னங்கள் (தடைகள்) நீங்குவதோடு சூரியனின் அருளால் ஆத்மபலம், ஆரோக்கியம் உண்டாகும்.

வீட்டில் பிள்ளையார் சிலை இருக்கிறதா?
பெரும்பாலான வீடுகளில் விநாயகர் சிலை வைத்து உள்ளனர். அது அளவில் பெரிதோ, சிறிதோ...அதுபற்றி கவலையில்லை. அந்தப் பிள்ளையாருக்கு கட்டாயம் ஏதாவது ஒரு நைவேத்யம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பழமாவது வைக்க வேண்டும். சதுர்த்தி திதிகளில் முடிந்தவரை மோதகம், கோதுமை அப்பம், பழவகைகள், பொரி ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். அப்பா சிவனுக்கு அபிஷேகம் என்றால் பிரியம். மாமா திருமாலுக்கு அலங்காரம் என்றால் பிரியம். அதுபோல, விநாயகருக்கு நைவேத்யம் என்றால் பிரியம். பானை வயிற்றோனுக்கு பசித்துக் கொண்டே இருக்குமல்லவா! அவர் போஜனப்பிரியர் என்பதற்கு அவ்வையாரும், அருணகிரியாரும் சான்று கூறியுள்ளனர். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் என்று ஆரம்பிக்கிறாள் அவ்வையார். இவையெல்லாம் கலந்த நைவேத்யத்தை உனக்கு நான் தருகிறேன். எனக்கு நீ முத்தமிழ் அறிவையும் தா, என வேண்டுகிறாள். தமிழில் அதிகமார்க் பெற விரும்பும் மாணவர்கள் இந்தப் பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும். அருணகிரியார் தனது பாடலில் கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி என்று விநாயகருக்கு பிடித்த நைவேத்யத்துடன் தான் திருப்புகழை ஆரம்பிக்கிறார்.

வலம் வந்தால் பலம்: குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் இடுவது, சிதறுகாய் உடைப்பது, எருக்கம்பூ மாலைஅணிவது, அருகம்புல்லால் அர்ச்சிப்பது, கொழுக்கட்டை படைப்பது அனைத்தும் விநாயகருக்கு உகந்த வழிபாடுகள். ஆனால், இதையெல்லாம் விட மிக எளிய வழிபாடு விநாயகரை வலம் வருவதாகும். அவரே இதற்கு உதாரணமாக நடந்து பலன் பெற்றார். அம்மையப்பரே உலகம்! உலகமே அம்மையப்பர்! என்று சொல்லி பெற்றோரை வலம் வந்து ஞானப்பழத்தைப் பெற்றார். குறைந்தபட்சம் மூன்றுமுறை விநாயகரை வலம் வரவேண்டும். 21முறை, 108முறை விநாயக மந்திரமாகிய ஓம் சக்தி விநாயக நம என்று ஜெபித்தபடி வலம் வந்தால் தேகபலம், புத்திபலம், பணபலம் என்று வாழ்விற்குத் தேவையான எல்லா பலங்களையும் பெற்று வாழலாம்.

ஜ்யேஷ்டராஜ சுவாமி: ரிக்வேதம் பழமையானது. இதில், விநாயகரைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. வேதகாலம் முதல் வழிபடப்பட்டு வரும் பழமையான கடவுள் இவர் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. ரிக்வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில் கணபதீம் என்ற குறிப்பு உள்ளது. இப்பெயரோடு ஜ்யேஷ்ட ராஜன் என்ற பெயரும் இவருக்குண்டு. இதற்கு முதலில் பிறந்தவன் என்பது பொருள். பார்க்கவபுராணத்தில் லீலா காண்டத்தில் விநாயகரின் அவதாரங்களும் அவருடைய திருவிளையாடல்களும் கூறப்பட்டுள்ளன. கடவுள் மறுப்பு கொள்கை உடைய புத்த, சமண கோயில்களிலும் இவருக்கு இடமுண்டு. தைத்ரீய ஆரண்யகம் இவரை தந்தி என்ற சொல்லால் அழைக்கிறது. தந்தோ தந்தி ப்ரசோதயாத் என்றே காயத்ரி மந்திரம் விநாயகரை குறிப்பிடுவதைக் காணலாம்.

உலகின் முதல் குமாஸ்தா: மகாபாரதக்கதையை வியாசர் சொல்ல விநாயகர் எழுதினார். பழங்காலத்தில் ஒரு நூலை உருவாக்கும் கிரந்தகர்த்தா ஒருவராகவும், அதனை எழுதுபவர் வேறொருவராகவும் இருப்பதுண்டு. ஓங்கார வடிவமாகவும், உலக இயக்கத்திற்கு காரணமாகவும், சிவசக்தி தம்பதியரின் மூத்த பிள்ளையாகவும் விளங்கிய விநாயகர் தன் நிலையில் இருந்து இறங்கி ஒரு குமாஸ்தாவைப் போல வியாசர் முன் அமர்ந்து, பாரதக்கதையை எழுதினார். தன் யானை முகத்துக்கு அழகு சேர்க்கும் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி கொண்டார். மகாபாரதம் ஒரு தர்ம காவியம். உலகில் தர்மம் நிலைக்க வேண்டும் என்பதற்காக இந்த தியாகத்தைச் செய்தார். அலுக்காமல் சலிக்காமல் பாரதத்தின் லட்சம் ஸ்லோகங்களையும் எழுதி முடித்தார்.

குழந்தைகளின் தெய்வம்
வீதியில் மணியோசை கேட்டால், ஆஹா! யானை வருது! என்று பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் ஓடுவர். யானையின் கம்பீரமான தோற்றம், வளைந்த துதிக்கை, நீண்ட பெரிய காதுகள் காண்பவரை ஈர்க்கும். விநாயகருக்கு வெள்ளை மனமும், பிள்ளை குணமும் மிகவும் பிடிக்கும். குழந்தை முதல் பெரியவர் வரை யாவரும் விரும்பும் ஒரே தெய்வம் இவர். படிக்கும் குழந்தைகளின் இஷ்ட தெய்வமாகவும் விளங்குகிறார். தேர்வை தடையின்றி எழுத உதவுபவர். குழந்தைகளுக்கு பிடித்த மோதகத்தை (கொழுக்கட்டை) விரும்பிச் சுவைப்பவர்.

பத்தடி உயர கடுகு! இருபதடி உயர கடலை!
அணுவுக்கு அணுவாகவும், அகிலாண்ட கோடியாகவும் இருப்பவர் விநாயகர். விநாயகர் அகவலில் அவ்வையார், அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்று அவரது தன்மையை குறிப்பிடுகிறார். விநாயகரின் உருவம் மிகப்பெரிதாக இருப்பதால்,மகாகாய என்ற பெயர் அவருக்கு உண்டு. பெரிய உருவத்தைக் காட்டும் விதத்தில் கர்நாடக மாநிலம் ஹம்பியில் இரண்டு விநாயகர் சிலைகள் உள்ளன. ஒருசிலை பத்தடி உயரம் கொண்டது. இதை சசிவுகல்லு என்பர். கடுகளவு ஆனவர் என்று பொருள். இருபது அடி உயரம் கொண்ட மற்றொரு விநாயகருக்கு கடலைக்கல்லு என பெயர். கடலை பருப்பு அளவுகொண்டவர் என்று பொருள். விநாயகரின் நிஜவடிவத்தோடு ஒப்பிட்டால், இச்சிலைகள் கடுகாகவும், கடலையாகவும் இருக்கும் என்று நமக்கு இந்தச்சிலைகள் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

இவர் இருக்கும் இடம் மிக உயரம்
உலகிலேயே மிக உயரத்தில் இருக்கும் பிள்ளையார் எங்கிருக்கிறார் தெரியுமா? இமயமலைத் தொடரில் லடாக் பகுதியில் இருக்கும் லே என்ற இடத்தில் தான். லே லடாக் பகுதியில் உள்ளது. இங்கு பணியாற்றிய ஒரு குடும்பத்தினரின் கனவில் யானை அடிக்கடி துரத்துவது போல இருந்தது. ஒருமுறை அவர்கள் அங்குள்ள ஸபித்துக் காளிமாதா கோயிலுக்கு சென்றபோது, பிள்ளையாருக்கு கோயில் கட்டும் எண்ணம் உதித்தது. அதன்பின், யானை கனவில் துரத்துவது நின்றுவிட்டது. பின் காஞ்சிப் பெரியவரின் ஆசி பெற்று கோயில் திருப்பணியைத் துவக்கினர். கட்டுமானப் பொருட்களும், விக்ரஹமும் சென்னையில் இருந்து சென்றது. கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி உயரம் உள்ள இக்கோயிலை ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டுமே தரிசிக்க முடியும். 2006 ஆகஸ்ட் 4ல் இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கமிஷன் கணபதி
மதுரையிலிருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் அப்பன் திருப்பதி கிராமத்திலுள்ள விநாயகர் தரகு விநாயகர் எனப்படுகிறார். இப்பகுதியில் விவசாயம் செய்யும் மக்கள் தங்கள் விளைநிலங்களில், விளைச்சல் சிறந்த இருந்தால் ஒரு குறிப்பிட்ட அளவு தானியத்தை கமிஷனாக (தரகு) தருவதாக வேண்டிச் செல்வர். விளைச்சலுக்கு பின் தாங்கள் வேண்டியபடி இங்கு வந்து காணிக்கை செலுத்துவர்.

பாலச்சந்தருக்கு அர்த்தம் தெரியுமா?
பாலச்சந்தர் என்ற பெயருக்கு அர்த்தம் கேட்டால், குழந்தை சந்திரன் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், உண்மையில் இந்தப் பெயருக்குரியவர் விநாயகர். விநாயகருக்குரிய பதினாறு நாமங்களில் (பெயர்கள்) பதினோராவது நாமமாக வருவது பாலச்சந்தர். வடமொழியில் ப வரிசையில் நான்குவித எழுத்துகள் உண்டு. இதில் நான்காவதாக வரும் பவில் தொடங்குவது பாலச்சந்தர். இதற்கு நெற்றியில் நிலாவைச் சூடியவர் என்று பொருள். விநாயகர் பார்வதியில் இருந்து தோன்றியவர் என்றாலும், தந்தையின் குணாதிசயமும் வேண்டும் என்பதற்காக, சிவனைப் போல் நெற்றியில் பிறைநிலா சூடியுள்ளார்.

தடங்கல் நீக்கும் மந்திரம்
பழங்காலத்தில் சுவடிகள் எழுதத் துவங்கும்போது பிள்ளையார்சுழிக்குப் பதிலாக விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று எழுதினர். இவ்வாறு சொல்லியோ அல்லது எழுதியோ தொடங்கும் பணிகள் விநாயகர் அருளால் தடங்கலின்றி விரைவில் நிறைவேறும் என்பர்.

வலம்புரி விநாயகருக்கு என்ன விசேஷம்?
விநாயகரின் தும்பிக்கை இடதுபக்கமாகத்தான் வளைந்திருக்கும். ஒரு சில இடங்களில் மட்டுமே வலப்புறமாக வளைந்த வலம்புரி விநாயகரைத் தரிசிக்கலாம். கும்பகோணம் அருகிலுள்ள ஒரு தலத்துக்கே திருவலஞ்சுழி என்ற பெயர் இருக்கிறது. இங்கு வலம்புரி விநாயகர் சந்நிதி உள்ளது. வலம்புரி விநாயகர் வடிவத்தில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இந்த வளைவு ஓம் என்ற மந்திரத்தை ஒத்துள்ளது. இடதுபக்கமாக தும்பிக்கை சுழிந்திருந்தால் ஓம் என்ற பிரணவ வடிவம் கிடைக்காது. வலம்புரிக்கு இத்தகைய சிறப்பு உண்டு. அவரது வாயின் வலதுஓரம் ஆரம்பித்து, கன்னம், மத்தகம் (சிரசு) ஆகியவற்றை சுற்றிக் கொண்டு, இடதுபக்கம் தும்பிக்கை வழியாக இறங்கி, அதன் சுழிந்த முடிவுக்கு வருவது ஓம் என்பதை ஒத்திருக்கும். இதனால் தான் வலம்புரி விநாயகருக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

தொந்திக்கு இன்னொரு வார்த்தை
டுண்டி என்ற சொல்லுக்கு தொந்திவயிறு என்று பொருள். காசியில் இருக்கும் விநாயகரை டுண்டி ராஜகணபதி என்பர். வடக்கே டுண்டி என்ற சொல் போல, தெற்கே ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்ற ஊர் இருக்கிறது. இங்கிருக்கும் விநாயகர் ராமரால் வழிபாடு செய்யப்பட்டவர். இலங்கைக்கு தொண்டியிலிருந்து பாலம் கட்ட திட்டமிட்ட ராமர், முதலில் விநாயகரை பூஜித்தார். அவருக்கு காட்சியளித்த விநாயகர் தொண்டியில் இருந்து கட்டாமல் இன்னும் தெற்காக சேதுக்கரையில் கட்டினால் இலங்கை கோட்டையின் வாசலை அடையலாம் என்று யோசனை வழங்கினார். வாழ்வில் வரும் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கும் வழி காட்டியாக தொண்டிவிநாயகர் இருக்கிறார். வெயில், மழை என பாராமல் மனைவியை தேடி அலைந்து திரிந்த சிரமப்பட்ட மாமாவின்(திருமாலின் அம்சமான ராமர்) மீது கொண்ட அன்பின் காரணமாக, இங்கு விநாயகரும் கூரை இல்லாமல் வெட்டவெளியில் அமர்ந்திருப்பதாக ஐதீகம். இந்த தொண்டிவிநாயகர் மீது ஆதிசங்கரர், கணேச பஞ்ச ரத்தினம் என்னும் பாடலைப் பாடினார்.

பெண்களுக்கு துன்பம் செய்தால்....
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகரை பிரம்மஹத்தி விநாயகர் என்பர். இந்த உலகத்திலேயே கொடிய பாவங்கள் எனக்கருதப்படுபவை பசுவையும், பிராமணர்களையும், சாதுக்களையும் கொலை செய்வது, நம்பிக்கை துரோகம் செய்வது, பெண்களை ஏமாற்றியோ, வலுக்கட்டாயமாகவோ கெடுப்பது ஆகியவை. இந்தச் செயல்களைச் செய்தோருக்கு எத்தனை பிறவி எடுத்தாலும் பாவம் தீராது. அவர்களது சந்ததியும் நன்றாக இருக்காது. இத்தகைய கொடிய பாவங்களுக்கும் தீர்வளிக்கிறார் பிரம்மஹத்தி விநாயகர். எங்கள் முன்னோரில் யாரோ செய்த தவறுக்காக எங்களை சோதிக்காதே என இவரிடம் மனமுருகி கேட்டு பிரார்த்திக்கலாம். முன்னோர்களால் பாதிக்கப் பட்ட குடும்பங்களின் வாரிசு இருந்தால் அவர்களுக்கு வேண்டிய உதவி செய்யலாம். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தோஷம் விலகும்.

ஒலி வடிவானவர்: ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் ப்ர என்பதற்கு விசேஷ என்பது பொருள்; நவம் என்பதற்கு புதுமை என்று பொருள். புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம், ஓம் என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது. பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவையிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும்.

விநாயகர் சதுர்த்தியை அறிமுகப்படுத்தியவர்: விநாயகர் சதுர்த்தி விழா ஆதிகாலம் முதல் இருந்துவந்தாலும், அதை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும் தியாகியுமான பாலகங்காதர திலகர்தான். 1893-ல் விநாயகர் சதுர்த்தியை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பூனாவில் அமைந்துள்ள தகடுசேத் கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா முதன்முதலாக விசேஷமாக கொண்டாடப்பட்டது.

விநாயகரின் பஞ்ச பூதத் தலங்கள்: பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐந்து தலங்களில் எழுந்தருளியுள்ளார் விநாயகர். காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலிலுள்ள விநாயகர் நிலத்தையும், திருவானைக்கா விநாயகர் நீரையும், திருவண்ணாமலை விநாயகர் நெருப்பையும், திருக்காளத்தி பாதாள விநாயகர் வாயுவையும், தில்லை சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர் ஆகாயத்தையும் குறிக்கின்றனர். இவர்களை வழிபட ஐம்பூதங்களால் ஏற்படும் அல்லல் விலகும்.
நன்றி - இணையம்

Sunday, June 24, 2012

நாசாவை அதிர வைத்த இந்து நெறியின் பேருண்மை!

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.


இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.


ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.


இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே,
நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!


எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நன்றி: Exibs & L R Sreenivasen Mylapore

Thursday, June 14, 2012

A/L செல்ல இருக்கும் மாணவர்களுக்காக ஒரு பதிவு....


நண்பர்களே !!!

இன்னும் குறைந்தது 2 மாதங்களே A/L பரீட்சைக்கு உள்ள நிலையில் தங்களை தயார்படுத்திக்கொண்டிருக்கும் எனது நண்பர்களே... என்னுடைய சொந்த அனுபவங்களையும் பார்த்த அனுபங்களையும் கொண்டு இந்த பதிவினை எழுதுகின்றேன்.

இந்தப் பதிவு நன்கு படித்தவனுக்கும் அதாவது எந்த கேள்வி வந்தாலும் என்னால் பதில் கொடுக்க முடியும் என்பவனுக்கும் எதுவுமே என்னால் இம் முறை செய்ய இயலாது, அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்பவனுக்கும் எழுதப்படவில்லை.... 

இது இரண்டுக்கும் நடுவில் நின்று  அவஸ்தைப்படும் நண்பர்களுக்காக......

இப்படிப்பட்டவர்களுக்கு முதலில் எழும் சந்தேகம் என்னால் இதை செய்து முடிக்க முடியுமா??? மற்றவங்க எப்பிடி செய்றாங்க என்னால இப்பிடி எல்லாம் செய்ய முடியாது. எங்களை நாங்களே குறைவாக எடைபோட்டுக்கொள்வது. முதல்ல மற்றவங்களோட உங்களை எடை போட்டுக்கொள்றத நிறுத்துங்க. எல்லோருக்கும் ஒரு capacity இருக்கும், இதுக்கு ஏற்றது போல நாங்க எங்களால எவளவு best கொடுக்க முடியுமோ, அவளவு கொடுத்தா போதும். 

எனக்கு எங்க அப்பா சொல்லுவார்... உன்னால முடிஞ்ச அளவுக்கு try பன்னு அதுக்கு மேலயும் முடியாட்டி என்ன செய்ய முடியும். ஒரு இல்லக்கினை அடையனும் என்றால் அதுக்கு பின்னால ஓடு அதுவும் முடியலயா பறந்து போயாவது அந்த இலக்கினை அடைஞ்சிடு.... எந்த சந்தர்ப்பத்திலயும் சோர்ந்து போயிடாதே.!!! உன்னில உனக்கு நம்பிக்கை இருந்தா மற்றவங்கள பார்த்து நீ பயப்படத்தேவையில்லை.  நானும் அதைத்தான் சொல்றேன்...உங்களால் முடிஞ்ச மட்டும் try பன்னுங்க. “ முயற்சி திருவினையாக்கும்”. நீங்க செய்து பார்க்கிற past paper bookல கூட இருக்கு." work hard victory shall follow "  . maximum உங்கள் முயற்சில தான் உங்க வெற்றி தங்கியிருக்கு.

இரெண்டும்கெட்டான் நிலையில உள்ளவங்களுக்கு ..... 

இன்னும் 2 மாதம் தான் இருக்கிறபடியா நீங்க pass பண்றளவுக்கு கட்டாயம்  படிச்சுக்கொடுத்திருப்பாங்க. ஆக நீங்க இனி புதுசா ஒரு பாடத்தை தொடங்கிறத நிப்பாட்டுங்க. உங்களால அதை படிச்சு முடிக்க முடியும் என்றால் படியுங்க. அல்லது தொடங்காதீங்க. நீங்க இவளவு நாளும் படிச்சதில இருக்கிற past paper கேள்விகளை செய்யுங்க. ஒன்னுக்கு இரண்டு தரம் செய்து பார்த்தாலும் தப்பில்லை. maximum past paper செய்து பாருங்க. இந்த நேரத்தில தான் எல்லோரும் தங்கள் வித்துவத்தைக் காட்ட எல்லாரும் paper அடிச்சு விடுவாங்க... அந்த school paper இந்த school paper என்று சாகடிப்பானுங்க. நீங்க எதையும் செய்வீங்க என்றால் அந்த paper செய்யுங்க இல்லாட்டால் அந்த paper செய்யாதீங்க. past paper போதும் நீங்க exam pass பண்றதுக்கு.

இயன்றளவு ஒரிடமும் ஓடித்திரியாமல் உங்களால எவளவு நேரம் முயற்சி எடுத்து படிக்க முடியுமோ அந்த அவளவுக்கு உங்களால் வெற்றி பெறமுடியும். 
எனக்கு தெரிஞ்ச நண்பன்(university of peradeniya) ஒருத்தன், அப்போ எங்க நாட்டில சண்டை நடந்து கொண்டிருந்த நேரம்.. வன்னில இருந்தவன்.. யாழ்பாணத்தில ஓடி ஓடி tuition போறமாதிரி அவனுக்கு வசதி எல்லாம் இல்லை. அவனுக்கு இருந்த ஒரே ஒரு வசதி maths, physics, chemistry books மட்டும் தான்.. அந்த புத்தகங்களை தன்னுடைய சொந்த முயற்சில படிச்சு இப்போ peradeniya university ல 3 ஆம் வருடம் படிக்கிறான். இப்பியான வங்கள முன்னுதாரணமா வைச்சு நாங்களும் முன்னேறலாம். அவனுக்கு அவனில இருந்த அளவுகடந்த தன்னம்பிக்கை முன்னேற்றிவைச்சுது. அது போல உங்களில உங்களுக்கு எப்போ நம்பிக்கை வருதோ... நீங்களும் ஜெயிக்கலாம். O/L  நல்லா செய்தவன் ஒன்னுமே செய்ய முடியாமல் இருக்கிறதும், O/L பெரிசா செய்யாதவன் A/L வந்த பிறகு நல்லா செய்றதும் என் கண்ணால் கண்ட உண்மை. எல்லாம் எங்கள் முயற்சில தங்கியிருக்கு...

இந்த நேரம் தான் ரொம்ப நித்திரைவரும்... படுத்திருக்க நல்லா இருக்கென்று படுத்திருந்தோமோ !!! எங்களோட எதிர்காலமும் அதோடபடுத்திடும்.. ஞாபகம் இருக்கட்டும். நீ தூக்கத்தில் இருந்து எழும் போது இன்னும் ஒரு 10 நிமிடம் தூங்கிவிட்டு எழும்பலாம் என்று எப்பொழுது சிந்திக்கத்தொடங்குகிறாயோ.. அப்பொழுதே உன்னுடை முயற்சிகள் அனைத்தும் பின்நோக்கி செல்ல ஆரம்பித்துவிடுகிறதென்று ஒரு பெரியவர் சொல்லியிருந்தார்.. உன்னுடைய முதல் எதிரி தூக்கம். ஆனால் அதுக்காக தூங்காமல் படிக்கிறவன் எல்லோரும் தன்னுடைய இலக்கினை அடைந்ததாகவும் சரித்திரம் இல்லை. 

படிக்க உனக்கு எப்போ  பிடிக்குதோ அந்த நேரம் படி. எங்கப்பா சொல்லுவங்க  “தூக்கம் வரும் போது படு. தூக்கத்தோட இருந்தியென்றால் இவளவு நேரம் இருந்த நான் என்று சொல்லலாமே தவிர மூளைக்கு ஏறினது பூச்சியமாத்தான் இருக்கும். படிக்கும் போது ரசிச்சுப் படி. எப்ப படிச்சாலும் எல்லாம் விளங்கும்”. என்னதான் நல்ல விடயமா இருந்தாலும் அதில் ஒரு ஈடுபாடிருந்தா தான் அதில முழுகவனமும் செலுத்த முடியும். படிப்பும் அது மாதிரி தான். முதல்லயே கஸ்ரம் இந்த கேள்வி என்னால் செய்ய முடியாது என்று நினைச்சா எப்பிடி easy யான் கேள்வியாக இருந்தாலும் கடைசி வந்தாலும் செய்யேலாது. அதே கேள்வியை சில நேரம் அடுத்த நாள் பார்த்தா ரொம்ப சுலபமாக இருக்கும்.. அப்பதான் கவலைப்படுவோம்.. தெரியுமோ தெரியாதோ.. முயற்சி செய்து பாருங்க. முடியலயா??? மனசில இருக்கிற போட்டி பொறாமையை விட்டிட்டு உங்க friends கிட்ட கேளுங்க ... அதுவும் முடியாம போனா உங்க teachers கிட்ட கேளுங்க.. ஆனா நீங்க அந்த கேள்விய செய்து பார்த்திட்டு கேட்டாதான் அவங்க சொல்றது விளங்கும். இல்லாட்டால் ஏதோ அங்க விசரில அலம்பிற மாதிரி இருக்கும்.

உங்களுக்கு தெரியாதது ஏதாவது இருந்தா யாரிட்டயாவது கேட்டுப்படியுங்க. தெரியாததை கேட்க வெட்கப்பட தேவையில்ல. அது போல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லிக்கொடுங்க. இது தான் படிக்கிறதுக்கான வழிமுறை. சில பேரோட கதைச்சதில அவங்க சொன்னது .. 

அண்ணா..!!!

நான் இந்த முறை exam எழுதல்ல அடுத்த முறை எழுத்தப்போறேன்.. இன்னும் கொஞ்சபேர் சொன்னது 2 ஆம் முறை பார்ப்போம்.. இப்போ ஏதோ எழுதுவம் என்று தான் எழுதப்போறேன்.!!! இது எவளவு முட்டாள் தனமான கதை.. அந்த துன்பத்தை அனுபவிச்சு பார்த்தால் தான் விளங்கும். அனுபவிச்சபடியால் தான் சொல்றேன்.. இப்பிடி ஒரு எண்ணம் இருந்தா அந்த எண்ணத்தை இன்றோட விட்டிட்டு படியுங்க. எதுவும் அந்தந்த பருவத்தில செய்து முடிச்சிடனும்.. பிறகு கஸ்ரம் தான் மிஞ்சும். நான் சொல்றது ஜோக்கா இருக்கும். சிலருக்கு அனுபவப்பட்டால் தான் விளங்கும். அனுபவத்தினைப் போல நல்ல ஒரு ஆசான் எதுவும் இல்லை. அதனால தான் சொல்றேன். அடுத்தமுறை பார்ப்போம் என்ற கதையை விட்டிட்டு படியுங்க. pass பண்றதுக்கு இந்த 2 மாதமும் போதும். முயற்சி எடுத்தீங்க என்றால்.

உனக்கென்று easyயாக செய்யக்கூடிய கேள்விகள் இருக்கும். exam செய்யும் போது அந்த கேள்விகளை எடுத்து செய். அதுவே மற்ற கேள்விகளை பயமில்லாமல் செய்றதுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும். கேள்வி செய்ய முடியாதென்று ஒன்றையும் விட்டு போகாதே. உனக்கு தெரிஞ்சத எழுது. நீ சரியா எழுதிற எல்லாத்துக்கும் உனக்கு marks இருக்கு. “ சிறு துளி தான் பெரு வெள்ளம்”. ஞாபகம் இருக்கட்டும். 

எனக்கு தெரிஞ்ச.. இந்தப் பதிவு எழுதும் போது ஞாபகம் வந்த அனைத்தும் எழுதி இருக்கிறேன். இதைவிட வேறு ஏதாவதும் சொல்ல வேண்டியிருக்கலாம். அப்பிடி ஏதாவது இருந்தால் கீழுள்ள comment  box இல் சேர்த்துக்கொள்ளுங்கள். 

இந்தப் பதிவினைப் பார்த்து 2 பேர் தம் முயற்சியால் முன்னேறினாலே சந்தோசம்.

 “தன் நம்பிக்கை உள்ளவன் இத் தரணியில் சறுக்கியதாக சரித்திரம் இல்லை”


இந்த பதிவினை இயன்றளவு share பண்ணிக்கொள்ளுங்கள். பிழைகள் ஏதும் இருப்பினும் சுட்டிக்காட்டுங்கள்.

நன்றியுடன்....
இ.சுகானன்.



Tuesday, May 1, 2012

அமெரிக்கா முழுவதும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்....!!!




கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.

இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.

இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பக்கம் பிடித்திருந்தால் உங்கள் சமூகவலைப் பக்கங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wednesday, March 28, 2012

முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு

 நண்பர்களே,

இணையத்தில் முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பினை Wazzub நமக்கு வழங்குகிறது. இவர்கள் "அவர்களின் வருமானத்தில் நமக்கு பிரித்து தருகிறார்கள்" . Google மற்றும் Facebook தளங்களை  போல இவர்களும் ஒரு பெரிய தளத்தை ஆரம்பிக்க போகிறார்கள் அதன் மூலம் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருகிறார்கள்.
 
நாங்கள் எந்த ஒரு காரணத்திற்க்காகவும் உங்களிடம் "முதலீடாக ஒரு பைசா கூட வாங்க மாட்டோம்" என்று கூறுகிறார்கள், என்றும் இலவசம் தான் என்று கூறுகிறார்கள்.
 
இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.

WAZZUB is in pre-launch until April 9, 2012. இந்த தளத்தில் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு Confirmation மெயில் வரும் அதை கிளிக் செய்து மறக்காமல் Verify செய்துவிடவும்.


இந்த தளத்தில் இதுவரை ( 27.03.2012, 8.30Pm ) 4,001,532க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து உள்ளனர்.   

கூகுள் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம் ஆனால் அதன் வருமானம் அவர்களுக்கு மட்டும் தான் ஆனால் இவர்கள் வரும் வருமானத்தில் பாதியை நமக்கு பிரித்து தருகிறார்கள். 

இந்த தளம் ஒரு புதிய முயற்சியாக இந்த வாய்ப்பினை நம் அனைவருக்கும் வழங்குகிறது ஆகையால் நாமளும் இணைந்து பயன்பெறுவோம்.
   

இந்த தளம் தன் சேவையை ஆரம்பிக்க 13 நாட்கள் மட்டுமே உள்ளது அதற்குள் இதில் நீங்கள் இணைந்துவிடுங்கள்.


மேலும் இந்த தளத்தினை பற்றி அறிய இந்த காணொளியை காணுங்கள் 


மேலும் இந்த தளத்தினை பற்றியும் இவர்கள் Charity பற்றி அறிய இங்கு செல்லவும் : http://heywazzub.blogspot.in/


முக்கிய குறிப்பு : நீங்கள் Verify செய்தால் மட்டுமே உங்களால் பணம் சம்பாரிக்க முடியும் ஆகையால். இந்த http://signup.wazzub.info/login.php Link சென்று பின் அந்த பக்கத்தின் இறுதியல் உள்ள  Please re-Send my verification email என்பதை கிளிக் செய்து பின் உங்கள் முகவரியை கொடுத்து Send கொடுக்கம்.

உடனே உங்கள் முனஞ்சல் முகவரிக்கு ஒரு Email வந்து இருக்கும் அந்தில் உள்ள Linkய் கிளிக் செய்து உங்கள் Accountய் Verify செய்து கொள்ளுங்கள்.


குறிப்பு : இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.


http://signup.wazzub.info/?lrRef=4bb50
 

 நன்றி : http://puthuputhuthagavalgal.blogspot.com/

Tuesday, March 27, 2012

மோகத்தை வாழவிடு !!!

வைரமுத்துவின்,,,,,,,
 மோகத்தை வாழவிடு !!!

பூவின் கர்ப்பத்தில்
புறப்பட்டு வந்தவளே
தேவின் உன் பேரழகை
திருடாமல் போவேனோ???

வானே இடிந்தாலும் 
வையம் நகர்ந்தாலும் 
தேனே உன் பொன்னுடலம்
தீண்டாமல் போவேனோ???

ஏதேனும் மின்னல் வந்து 
என் கண்கள் பறித்தாலும்
பாதாதி கேசங்கள்
பாடாமல் போவேனோ???

வெளியே தீவிழுந்து 
வீதி எரிந்தலும் 
கிளியே உன் நுனிமூக்கைக்
கிள்ளாமல் போவேனோ???

ஒருநாள் ஒரு பொழுது
உன்மடியில் நானிருந்து
திருநாள் காணாமல்
செத்தொழிந்து போவேனோ???

நீலக் குழல் விலக்கி
நெற்றியிலே முத்தமிட்டுக்
காலகதி மறக்காமல்
கண் மூடிப் போவேனோ???

நீராக மாறிஉந்தன்
நெற்றியிலே நானிறங்கிக்
கூரான மார்பில்
குதித்துவிட மாட்டேனோ???

மோகச் சிகரத்தில்
மோட்சநிலை காணாமல்
சாகப் பிறந்தவன் போல்
சட்டென்று போவேனோ???

தங்க விரல்தடவி
தளிர்தடவி மலர்தடவி
அங்கத்தில் அத்வைதம்
அடையாமல் போவேனோ???

பேச்சிழந்த வேளையிலே
பெண்ணழகு என் மார்பில்
மூச்சுவிடும் வாசனையை
முகராமற் போவேனோ???

என்நினைவு மெல்லமெல்ல
என்னைவிட்டுப் போகையிலும்
உன்பெயரை உன்பெயரை
உச்சரிக்க மாட்டேனோ???

கண்ணுக்குள் கண்வைத்துக்
கண்ணிமையால் கண்தடவிச்
சின்னதொரு சிருங்காரம்
செய்யாமற் போவேனோ???

மின்மினிப் பூச்சிகளை
மெல்லப் பிடித்துவந்து
கன்னத்தில் ஒட்டவைத்துக்
கைதட்ட மாட்டேனோ???

வட்ட நிலாச் சாறு
வடிகின்ற ராத்திரியில்
கட்டழகே உன் நிழலைக்
கண்டுவிட மாட்டேனோ???

உலகத்துக் கவிகளிடம்
ஒவ்வோர் வரிவாங்கி
திலகத்து நெற்றியிலே
தீட்டிவிட மாட்டேனோ???

சாவுக்கும் வாழ்வுக்கும்
சாண்தூரம் இருந்தாலும்
தேவதை உன் புன்னகையைச்
சித்திரமாய்த் தீட்டேனோ???

தலையெல்லாம் பூப்பூத்து
தள்ளாடும் மரம்ஏறி
இலையெல்லாம் உன்பெயரை
எழுதிவைக்க மாட்டேனோ???

சிலுசிலுக்கும் இரவில் நீ
சிற்றுறக்கம் கொண்டாலும்
கொலுசுக்குள் மணியாகிக்
கூப்பிடவே மாட்டேனோ???


Wednesday, March 7, 2012

கோவிலுக்கு ஏன் போக வேண்டும்?..

 
ஒரு ஊரில் இராமு, சோமு என்று இரு நண்பர்கள் இருந்தார்கள். இருவருமே மிக நெருங்கிய நண்பர்கள். எல்லா நேரங்களிலும் சேர்ந்தே இருப்பார்கள். ஒரே ஒரு நேரத்தைத் தவிர. இராமுவுக்கு இறைபக்தி கொஞ்சம் அதிகம். அதனால் எப்போதும் கோவில், குளம், சமயப்பேருரைகள் என்று செல்ல விரும்புவான். சோமுவுக்கோ தெய்வபக்தி இருந்தாலும் இராமு அளவிற்குக் கிடையாது; எப்போதும் திரைப்படம், கேளிக்கை என்று வாழ்க்கையை உல்லாசமாகக் கழிக்க வேண்டும்; ஒரு நாளைக்கு ஒரு முறை இறைவன் திருவுருவப் படத்தின் முன்பு நின்று ஒரே ஒரு நிமிடம் இறைவனை வணங்கினால் போதும்; எப்போதும் என்னை வணங்கிக் கொண்டே இரு என்றா இறைவன் கேட்கிறார்? என்று நினைப்பவன். இந்த விதயமாக இருவர் நடுவிலும் விவாதங்கள் வந்து கொண்டே இருக்கும்.

ஒரு முறை இராமு கோவிலுக்குச் செல்கிறேன் என்று சென்ற நேரத்தில் சோமு அன்று வந்த ஒரு புதிய திரைப்படத்திற்கு சென்றான். கோவிலுக்குச் சென்ற இராமு திருச்சுற்றைச் சுற்றி வருகையில் கல்லில் தடுக்கி கால் விரலில் அடிபட்டு குருதி வந்து நொண்டிக் கொண்டே வீட்டைச் சென்று அடைந்தான். சோமுவோ திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்த பிறகு வீட்டிற்கு வரும் வழியில் தெருவில் ஒரு பத்து ரூபாய்த் தாளைக் கண்டெடுத்து மிக மகிழ்ச்சியாக வீட்டை அடைந்தான்.

மறுநாள் இராமு நொண்டிக் கொண்டே வருவதைப் பார்த்து சோமு என்னவென்று விசாரித்து அறிந்து கொண்டான். உடனே கேலியாக 'பார்த்தாயா உன் கடவுள் உன்னைக் காப்பாற்றியதை? நீ திரைப்படத்திற்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டுக் கோவிலுக்குச் சென்றாய். நானோ திரைப்படத்திற்குச் சென்றேன். உனக்குக் காலில் அடி. எனக்கு பத்து ரூபாய் லாபம். இதிலிருந்தே தெரியவில்லையா எப்போதும் சாமியைக் கும்பிடனும்ன்னுத் தேவையில்லைன்னு. உன் சாமி அடடா இவன் நம்ம பரமபக்தன்னு உன்னை அடிபடாம பாத்துக்கிட்டாரா? இல்லையே? நான் கோவிலுக்கு வரலைன்னு என்னைத் தண்டிச்சாரா? இல்லையே? எனக்கு பரிசு தானே கொடுத்தார்?' என்று கேட்டான். இராமுவுக்கும் சோமு சொல்வது சரியாகத் தான் பட்டது. ஆனால் இறைவன் தன்னைக் கைவிட்டுவிட்டான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழப்பத்துடன் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டான்.

சில நாட்கள் சென்றது. அந்த ஊருக்கு ஒரு பெரும் புகழ் பெற்ற சோதிடர் வந்தார். அவர் ஜாதகத்தைப் பார்த்து உள்ளதை உள்ளபடியே எடுத்துச் சொல்வதில் வல்லவர் என்று பெரும் பெயர் பெற்றிருந்தார். சோமுவுக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம். இராமுவுக்கு அதில் நம்பிக்கை உண்டு; இல்லை என்ற எந்தச் சார்பும் இல்லை. சோமு அந்தச் சோதிடர் பொய்யானவர் என்பதை நேரடியாகச் சென்று சோதித்து நிறுவிவிட வேண்டும் என்று எண்ணி இராமுவையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.

சோமுவும் இராமுவும் தங்கள் ஜாதகங்களை எடுத்துக் கொண்டு சோதிடரிடம் கொடுத்துப் பலன்களைக் கணிக்கச் சொன்னார்கள். அந்த ஜாதகங்கள் தங்கள் ஜாதகங்கள் என்று சொல்லவில்லை. முதலில் இராமுவுடைய ஜாதகத்தை எடுத்தச் சோதிடர் சிறிது நேரம் ஆராய்ந்து விட்டு ஒன்றும் சொல்லாமல் அதனைக் கீழே வைத்துவிட்டார். பின்னர் சோமுவுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் பார்த்துவிட்டு 'இந்த ஜாதகம் ஒரு கோடீஸ்வரனுடையது' என்று தொடங்கினார். இதனைக் கேட்ட நண்பர்கள் இருவருக்கும் சிரிப்பு தாங்கவில்லை. அவர்கள் சிரிப்பதைப் பார்த்து என்ன என்று கேட்டச் சோதிடரிடம் சோமு 'ஆமாம். அந்த இன்னொரு ஜாதகத்தை ஏன் கீழே வைத்துவிட்டீர்கள்? ஒன்றுமே அதனைப் பற்றிச் சொல்லவில்லையே?' என்று கேட்டான். அதற்கு அந்தச் சோதிடர் 'அந்த ஜாதகக்காரர் உயிரோடு இல்லை. அதனால் அந்த ஜாதகத்தை இனிமேல் பார்த்துப் பயனில்லை என்று கீழே வைத்தேன்' என்றார்.

இதனைக் கேட்ட இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். 'ஆகா. வகையாக மாட்டிக் கொண்டீர்கள் ஐயா. இந்த ஜாதகங்கள் எங்களுடையது தான். நான் கோடீஸ்வரன் இல்லை. என் ஜாதகத்தைப் பார்த்து அது கோடீஸ்வரன் ஜாதகம் என்கிறீர்கள். என் நண்பன் இதோ உயிரோடு இருக்கிறான். அவன் ஜாதகத்தைப் பார்த்து அது இறந்தவருடைய ஜாதகம் என்கிறீர்கள். நீங்கள் சரியான ஏமாற்றுப் பேர்வழி என்பது இதிலேயே நன்றாகத் தெரிகிறது' என்றான் சோமு.

இந்த மாதிரி துள்ளுபவர்கள் எத்தனை பேரைப் பார்த்திருப்பார் அந்த சோதிடர். எந்த ஊருக்குச் சென்றாலும் ஊருக்கு ஒருத்தராவது இந்த மாதிரி வந்து அலம்பல் பண்ணுவது தானே வழக்கம். தான் கற்ற வித்தையில் தளராத நம்பிக்கை கொண்ட அந்தச் சோதிடர் கொஞ்சமும் அசராமல் 'தம்பி. நீங்கள் முடிவுக்கு வருவதற்கு முன் நான் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்குப் பதில் சொல்லுங்கள். பின்னர் நான் சொல்வது தவறா இல்லையா என்று நீங்கள் முடிவு செய்யலாம்' என்றார்.

இருவரும் 'சரி. கேளுங்கள்' என்றனர்.

இன்னும் கொஞ்ச நேரம் இராமுவின் ஜாதகத்தைப் பார்த்து ஏதேதோ கணித்து விட்டு 'சரி. இரண்டு வாரத்திற்கு முன் வெள்ளிக்கிழமை ஆறு மணியளவில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இராமு?' என்று கேட்டார். சற்று சிந்தித்த இராமு, 'நினைவிற்கு வந்துவிட்டது. அந்த நாளை மறக்க முடியாது. அப்போது நான் கோவிலுக்குச் சென்றிருந்தேன்' என்று சொன்னான். 'அப்போது அங்கே என்ன நடந்தது?' 'என்ன நடந்தது என்றால்? நான் கோவிலுக்குப் போனேன். சாமி கும்பிட்டேன். அவ்வளவு தான் நடந்தது. வேறு என்ன?' 'வேறு ஏதாவது குறிப்பிடும் படியா நடந்ததா?' 'ம்ம்ம். அப்படிப் பாத்தா என் கால்விரல் ஒரு கல்லுல தடுக்கி அடிப்பட்டு குருதி வந்தது. அவ்வளவு தான்.'

பின்னர் சோமுவுடைய ஜாதகத்தையும் கொஞ்ச நேரம் கணித்துப் பார்த்து விட்டு 'சோமு. அதே நாள் அதே நேரம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?' 'நான் இராமுவுடன் கோவிலுக்குப் போகாமல் திரைப்படம் போனேன்'. 'சரி அங்கே ஏதாவது குறிப்பிடும் படியா நடந்ததா?' 'அப்படி ஒன்னும் இல்லை. திரும்பி வரும்போது வழியில் ஒரு பத்து ரூபாய்த் தாள் ஒன்று கிடைத்தது'.

'இப்போது எனக்கு புரிந்துவிட்டது. நான் சொன்ன பலன்களில் தவறில்லை. உங்கள் இருவரின் ஜாதகப்படி கிரக நிலைகளின் படி நான் சொன்ன பலன்கள் தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்த செயல்களால் அந்த பலன்களில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. கவனமாகக் கேளுங்கள். இராமுவின் ஜாதகப்படி அந்த நேரத்தில் ஒரு விபத்தில் அவர் உயிர் போக வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் அவர் கோவிலில் இறைவனை வணங்கிக் கொண்டிருந்ததால் இறைவன் அருளால் அவர் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது. அந்த நேரத்தில் விபத்து என்று பயன் கொடுக்க வேண்டிய வினைகள் இறைவன் அருளால் சிறு காயத்துடன் போனது. அதே நேரத்தில் நண்பனுடன் கோவிலுக்குப் போகாமல் கோவிலுக்குப் போகிறவர்களைப் பற்றி ஏளனமாகப் பேசி கேளிக்கையில் ஈடுபட்டதால் சோமுவுக்கு அவர் ஜாதகப்படி கிடைக்க வேண்டிய கோடி ரூபாய் கிடைக்காமல் வெறும் பத்து ரூபாய் மட்டுமே கிடைத்தது. இது தான் நடந்திருக்கிறது.

நாம் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப தான் ஜாதகப் பலன்கள் அமைகின்றன. ஜாதகப் பலன்கள் என்ன நடக்கலாம் என்று சுட்டிக் காட்டுபவை. சாதாரணமாக அவை அவ்வாறே நடக்கும். ஆனால் மழை பொழியும் போது குடை பிடித்துக் கொண்டு மழையிலிருந்து தப்புவதைப் போல ஏதாவது பிராயச்சித்தம் செய்தாலோ இல்லை இறையருளாலோ அந்த ஜாதகப் பலன்கள் தங்கள் வலிமையை இழக்கும். தீயவை நடக்க வேண்டிய நேரம் அதன் தாக்கம் குறைவாக இருக்கும். நல்லவை நடக்க வேண்டிய நேரம் அதன் தாக்கம் பலமடங்கு அதிகமாகக் கிடைக்கும். இதுவே ஜாதக பலன்கள், பிராயச்சித்தம், இறையருள் போன்றவற்றின் இரகசியம்.'

சோதிடர் சொன்னது இரு நண்பர்களுக்கும் ஏற்றுக் கொள்ளும் படி இருந்தது. அன்று இறைவன் தன்னைக் கைவிட்டுவிட்டாரோ என்று தான் குழப்பம் கொண்டது இராமுவின் நினைவிற்கு வந்தது. உண்மையில் தனக்கு நேர வேண்டிய மரணத்திலிருந்து தன்னை இறைவன் காப்பாற்றியிருக்கிறார் என்று புரிந்தது. சோமுவும் அன்று முதல் இராமுவுடன் சேர்ந்து அடிக்கடி கோவில், குளம் என்று சுற்றத் தொடங்கினான்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை இது.