Saturday, July 25, 2020

எதற்காக எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்?

சிந்தியுங்கள்... செயலாற்றுங்கள்.... அதிகம் படித்த திமிரில் மூடர்கள் போல் செயற்படாதீர்கள்.....

அதிகம் பகிருங்கள்!!!

அறிவுள்ளவர்கள் சிந்திக்கட்டும்.!!!

கானொளிகள் தனித்தொகுப்பாக விரைவில்...

Friday, July 24, 2020

தனிமைப்படுத்தலும் நோய்தடுப்பும் தொடர்பான சட்டவிதிகள் - 03

இச்சட்டத்தை நிருவகித்தல் அல்லது அமுலாக்கம் தொடர்பில் நோக்குமிடத்து 03 விடயங்கள் அல்லது 03 படிநிலைகள் காணப்படுகிறது.
1. தகுதிவாய்ந்த அதிகாரி (Proper Authority)
2. அதிகாரக் கையளிப்பு (Delegation of Powers)
3. பரிசோதகர்களை நியமித்தல் (Appointment of Inspectors)
7481 இலக்க 28.08.1925 திகதிய மற்றும்
9134 இலக்க 11.06.1943 திகதிய அரச வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட தானியங்களைக் களஞ்சியப்படுத்தலும் புழுவியாதியைத் தடுத்தலுக்குமான தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் (Quarantine Regulations related to Storage of Grains and Ancylostomiasis) 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 02 மற்றும் பிரிவு 03 இன் நோக்கெல்லையை விரிவுபடுத்தியுள்ளது. அதாவது தகுதிவாய்ந்த அதிகாரிகள் எனும் விடயம் தொடர்பான பொருட்கோடல் இவ் ஒழுங்குவிதிகளில் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம்
(1) தீவு முழுவதற்குமான தகுதிவாய்ந்த அதிகாரியாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும்,
(2) உள்ளூர் இடப்பகுதிகளுக்கான தகுதி வாய்ந்த அதிகாரிகளாக அந்தந்த மாநகர சபை, நகர சபை அல்லது பட்டின/கிராம சபைகளின் (தற்போது பிரதேச சபைகள்) தவிசாளர்கள் அல்லது அந்த இடப்பரப்புகளுக்கான சுகாதார வைத்திய அதிகாரிகள்,
(3) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையம் தொடர்பில் Director of Qurantine அல்லது துறைமுக சுகாதார அதிகாரி (Port Health Officer),
(4) இராணுவம், கடற்படை மற்றும் வான்படை ஆகிய படைத்துறைகளின் விடயத்தில் அந்தந்த படைப்பிரிவின் வைத்தியர்கள் (Medical Officer),
(5) மேற்படி விடயப்பரப்பினுள் அடங்காத ஏனைய விடயங்கள் தொடர்பில் அந்தந்த பிரிவுக்குப் பொறுபான சுகாதார சேவைகள் அத்தியட்சகர்கள் (தற்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - RDHS) இடப்பரப்புக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்படலாம்.
இதனடிப்படையில் காலத்துக்குக் காலம் பல ஒழுங்குவிதிகள் ஆக்கப்பட்டுவந்துள்ளது. அதில் பெரும்பாலான ஒழுங்குவிதிகளில் இடப்பரப்பிற்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளாக உள்ளூராட்சி சபையின் தவிசாளர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
புழுவியாதி தெடர்பான ஒழுங்குவிதியில் உள்ளூராட்சி சபையின் தவிசாளர்களும், அந்த இடப்பரப்புக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளும் இடப்பரப்புக்குரிய தகுதி வாய்ந்த அதிகாரிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
#அதிகாரக் #கையளிப்பு தொடர்பில் நோக்குமிடத்து 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 11 பிரகாரம் அமைச்சர் இச்சட்டத்தின் அல்லது ஒழுங்கு விதிகளின் அமுல்ப்படுத்துகை தொடர்பில் தனது அதிகாரங்களை உள்ளூர் அதிகார சபைகளுக்குக் கையளிக்கலாம்.
அத்துடன் 10713 இலக்க 17.09.1954 இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கமைய பிரிவு 37 பிரகாரம் தகுதி வாய்ந்த அதிகாரியானவர் எழுத்துமூலமாக தனது அதிகாரத்தை கையளிப்பு செய்ய முடியும். இதன் மூலமாக இடப்பரப்புகளுக்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளை ஏற்பாடுசெய்து கொள்ளலாம்.
1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் 3(1)(r) பிரிவில் இச்சட்டதிலும், இதன்கீழ் ஆக்கப்படும் ஒழுங்குவிதிகளிலும் ஏற்பாடு செய்யப்படும் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தும் நோக்கத்திற்காக பரிசோதகர்களை நியமித்தலுக்கும், அவர்கள் தமது கடமையை ஆற்றுவதற்கு அவசியமான அதிகாரங்களை வழங்குவதற்குமான ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்காக அமைச்சர் அதே சட்டத்தின் பிரிவு 2 இன்கீழ் தனது ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்கான தத்துவத்தைப் பிரயோகிக்க முடியும்.
அத்துடன் 9134 இலக்க 11.06.1943 திகதிய வர்த்தமானியிலும் 6365 இலக்க 22.04.1938 திகதிய வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்ட பொது ஒழுங்குவிதிகள் எனும் தலைப்பின் கீழான பிரிவு 38 "பரிசோதகர் (Inspector)" என்பதற்கான வரைவிலக்கணத்தைக் குறிப்பிடுகிறது. அதன்படி பரிசோதகர் என்பது சுகாதார சேவைகள் திணைக்களத்தின் "சுகாதார உதவியாளர்கள் (Sanitary Assistants) அல்லது மாநகர சபைகள்/ நகர சபைகளின் சுகாதாரப் பிரிவுக்குப் பொறுப்பான ஏவரேனும் பரிசோதகர் அல்லது உப பரிசோதகரை அல்லது Director of Quarantine Department இனால் நியமிக்கப்பட்ட எவரேனும் பரிசோதகரை குறிப்பதாக அர்த்தம் கொள்ளவேண்டும். Sanitary Assistant என்பது பின்னர் Sanitary Inspector/ Sanitary Board Inspector எனவும் தற்போது Public Health Inspector(PHI) எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதே ஒழுங்குவிதிகளின் பிரிவு 39 பிரகாரம் தகுதி வாய்ந்த அதிகாரி தனது தற்துணிபின் அடிப்படையில் இச்சட்டத்தின் பணிகளை ஆற்றுவதற்கான பரிசோதகர்களை நியமனம் செய்யவும், இரத்துச் செய்யவும் முடியும்.
இங்கு பரிசோதகர்கள் நியமிக்கப்படாவிடின் அல்லது பரிசோதகர்களுக்கான அதிகாரம் வழங்கப்படாவிடின் சட்டம் அல்லது ஒழுங்குவிதிகளின் அமுலாக்கல் முழுமை பெறாது.
அத்துடன் 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்படும் ஒழுங்குவிதிகள் அனைத்தும் அதன் பிரிவு 12 இன் பிரகாரம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படல் வேண்டும். அத்தகைய வர்தமானி பிரசுரிக்கப்பட்ட திகதியிலிருந்து அது சட்ட வலுக்கொள்ளும் எனவும் 12ம் பிரிவு குறிப்பிடுகிறது.

Kajenthiran Sathithasan

------ தொடர்ச்சி விரைவில் -----

Tuesday, July 21, 2020

யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு இடமா?

யாழ்பாணத்தில் பெரியதொரு மணல் மேடு போன்று காட்சியளிக்கும் இந்த குட்டி தீவு ஒன்றும் இலங்கை கிடையாது!
பார்வைக்கு அச்சொட்டாக இலங்கையை போன்று காட்சியளிக்கும் இது இந்தோநேசியாவின் பரப்பிலுள்ள KENAWA_ISLAND எனும் ஒரு குட்டி தீவாகும்.
சுற்றுலாத்துறையினரின் கவனத்தை இந்த குட்டித்தீவு வெகுவாக ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.












தனிமைப்படுத்தலும் நோய்த் தடுப்பும் தொடர்பான சட்ட விதிகள் - 02


இலங்கையில் நோய்த் தடுப்பு விடயங்கள் தொடர்பாக காலத்துக்குக் காலம் பல சட்டங்கள் ஆக்கப்பட்டிருப்பினும்கூட 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த் தடுப்பும் கட்டளைச் சட்டமே சுகாதாரத் துறையின் நோக்கெல்லையில் மிகவும் பரந்தளவிலான விதானங்களைத் தாங்கி நிற்கும் சட்ட ஏற்பாடாகவுள்ளது. இது தனிமைப்படுத்தலுக்கான சட்டமாக அறியப்படினும்கூட நோய்த் தடுப்பு தொடர்பாக ஆளும் சட்ட விதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
இச் சட்டத்தின் பிரிவு 02 இன்கீழ் ஒழுங்குவிதிகளை ஆக்கும் அதிகாரம் அமைச்சருக்கு உள்ளது. அமைச்சர் என்பது சுகாதாரத் துறைக்குப் பொறுப்பான அமைச்சரைக் குறிக்கும். அந்த வகையில் அமைச்சர் பிரிவு 03 இல் குறித்துரைக்கப்
-பட்டதற்கிணங்க
(*) விமான நிலையம் அல்லது துறைமுகம் வந்தடைகின்ற விமானங்கள் மற்றும் கப்பல்களை தொற்றுநீக்கம் செய்வதற்கான,
(*) விமானம் அல்லது கப்பல்களில் கொண்டு வரும் பொருட்களை தொற்று நீக்கம் செய்வதற்கான,
(*) சில விமானம் தரையிறங்குவதை அல்லது கப்பல் வந்தடைவதை நிபந்தனையுடன் அனுமதிக்கும் அல்லது முற்றாக தடைசெய்வதற்கான,
(*) சில விமானம் அல்லது கப்பல் உள் வருவதை அல்லது வெளிச் செல்வதைத் தடுப்பதற்கான,
(*) புகையிரதத்தில் பயணம் செய்வோரை சோதனை செய்தல் மற்றும் வைத்திய சாலைகளில் தொற்று நோயாளர்களை ஏனைய நோயாளர்களிலிருந்து வேறுபிரித்து வைப்பதற்கான,
(*) தொற்றுநோய் ஏற்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி வைப்பதற்கான,
(*) தொற்றுநோய் ஏற்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தவும், கண்காணிப்பதற்குமான,
(*) தொற்றுநோய் ஏற்பட்ட நபர்களை அவர்களது வசிப்பிடத்திலிருந்து அகற்றி வைத்தியசாலை அல்லது தனிமைப்படுத்தி வைக்கும் இடங்களுக்கு அனுப்புவதற்கும் பராமரிப்பதற்குமான,
(*) தொற்றுநோய் காரணமாக இறந்த நபர்களின் சடலங்களை அடக்கம் (எரித்தல் அல்லது புதைத்தல்) செய்வதற்கான முறைமைகள் தொடர்பான,
(*) வசிப்பிடமொன்றில் அனுமதிக்கக்கூடிய ஆட்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க,
(*) சில கிணறு, குழிகளை மூடுவதற்கான,
(*) சுகநலனுக்குப் பாதகமான வீடுகள், கட்டிடங்கள், அறைகள், கால்வாய்கள் மற்றும் பிற இடங்களை தொற்றுநீக்கம் செய்வதற்கான,
(*) இச்சட்டதிலும் ஒழுங்குவிதிகளிலும் குறித்துரைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்கும், விசாரணை செய்வதற்கும், கடமைகளைப் புரிவதற்கும் பரிசோதகர்களை நியமிக்கவும் அதிகாரம் வழங்குவதற்குமான
ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்கான அதிகாரம் அமைச்சருக்குள்ளது. அந்தவகையில் நோக்குமித்து மேற்படி அதிகாரத்தின் அடிப்படையில் Covid-19 நோய் நிலைக்கு முன்னர் இச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட பிரதான ஒழுங்குவிகளாக பினவருவனவற்றைக் குறிப்பிடலாம்.
(1) புழு வியாதியை தடுப்பதற்கான ஒழுங்குவிதிகள்
(Regulations related to Anchylostomiasis)
(2) நுளம்புகள் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான ஒழுங்குவிதிகள்
(Regulations related to Mosquito borne diseases)
(3) தனிமைப்படுத்தலுக்கான ஒழுங்குவிதிகள் (Qurantine Regulations)
(4) பொது ஒழுங்குவிதிகள்
(General Regulations)

COPY FROM:

Kajenthiran Sathithasan
 

-----தொடர்ச்சி விரைவில் ------

தனிமைப்படுத்தலும் நோய்த் தடுப்பும் தொடர்பான சட்டவிதிகள் - 01

அண்மைக் காலத்தில் கொவிட் -19 நோய் பரவுதல் நிலைமையைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தனிமைப்படுத்தல் (Quarantine) எனும் சொற்பதம் பொது மக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும், சுகாதாரத் துறையிலும் பிரபல்யம் பெற்ற ஒன்றாகக் காணப்படுகிறது.
சமூகத்திலுள்ள ஆட்களிடையே விரைவில் பரவக்கூடிய நோய்களால் ஏற்படுகின்ற தாக்கத்தைக் குறைப்பதற்காக அல்லது அத்தகைய நோய் நிலைமை ஒன்றைக் கட்டுப்படுத்துவதற்காக நோய் ஏற்பட்ட ஆட்களால் அல்லது நோயைக் காவக்கூடிய சந்தேகத்திற்கு உரிய ஆட்களால் குறித்த நோய் சமூகத்தில் மேலும் பரவாது தடுக்கும் நடவடிக்கையாக தனிமைப்படுத்தல் செயற்பாடு காணப்படுகின்றது. இது தொற்று நோய்களைத் தடுப்பதற்கான மிகவும் பழமை வாய்ந்த முறை என்பதுடன் பின்னர் இது குறித்த நோய்த்தடுப்பு விடயமானது சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் செயற்பாடாகியது.
தனிமைப்படுத்தல் சட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்பாக இலங்கையில் பொதுவாக தொற்று நோய்த்தடுப்பு செயற்பாடுகள் தொடர்பில் காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகளாக பின்வரும் சட்டங்களைக் குறிப்பிடமுடியும்.
(1) 1866ம் ஆண்டின் 08ம் இலக்க தொற்று நோய்கள் சட்டம் (Contagious Diseases Ordinance)- [சின்னம்மை (Small pox) மற்றும் வாந்திபேதி (Cholera) நோய் கட்டுப்பாடு]
(2) 1862ம் ஆண்டின் 15ம் இலக்க பீடைகள் கட்டளைச் சட்டதின் சில பகுதிகள்
(Nuisance Ordinance)
(3) 1883ம் ஆண்டின் 02ம் இலக்க தண்டனை சட்டக் கோவையின் அத்தியாயம் XIV
(Penal Code)
(4) 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப் -படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டம் (Quarantine and Prevention of Diseases Ordinance) - [கொள்ளை நோய் (Plague) மற்றும் சகல தொற்று நோய்களையும் தடுப்பதற்கான சட்டம்]
(5) 1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடைமுறைக் கோவையின் பொதுத் தொல்லைகள் தொட்பான அத்தியாயம் IX இன் கீழான ஏற்பாடுகள். (Criminal Procedure Code)
(6) 2007ம் ஆண்டின் 11ம் இலக்க நுளம்பு பெருக்கத் தடுப்புச் சட்டம் (Prevention of Mosquito Breeding) - [டெங்கு நோய் கட்டுப்பாடு]
மேற்படி சட்டங்கள் ஒவ்வொன்றும் தொற்று நோய்க் கட்டுப்பாடு தொடர்பில் பொலிசார், உள்ளூராட்சி சபைகள், சுகாதாரத் திணைக்களம் என வெவ்வேறான நபர்கள்/ அதிகார மையங்களுக்கு அதிகாரம் வழங்க ஏற்பாடு செய்வதாகக் காணப்படுகிறது.

இவற்றில் பொது சுகாதாரத் துறைசார் சட்டங்களாக,
(1) Quarantine and Prevention of Diseases Ordinance,
(2) Prevention of Mosquito Breeding Act என்பன உள்ளதுடன்
Prevention of Mosquito Breeding Act டெங்கு நோயுடன் மட்டும் தொடர்புறுவதுடன் Quarantine and Prevention of Diseases Ordinance ஆனது தொற்றுநோய் கட்டுப்பாடு தொடர்பில் விரிவான பிரயோகம் உடையது.
இதன் பின்னணியில் தனிமைப்படுத்தலும் நோயத்தடுப்பும் கட்டளைச் சட்டம் [Quarantine and Prevention of Diseases Ordinance] தொடர்பில் ஆராயுமிடத்து இது ஆங்கிலேயரது ஆட்சிக் காலதில் ஆக்கப்பட்ட ஓர் மிகவும் பழமைவாய்ந்த சட்டமாகும்.
இது பிரதானமாக Plague நோயைக் கட்டுப் படுத்தும் நோக்கில் ஆக்கப்பட்டிருப்பினும் தொற்றும் தன்மையுடைய சகல நோய்களும் இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் பரவுதலைத் தடுத்தல் இச்சட்டவாக்கத்தின் நோக்கமென அதன் நீள்தலைப்பு கூறுகிறது.

COPY FROM:

Kajenthiran Sathithasan

----- தொடர்ச்சி விரைவில் -----

Monday, July 20, 2020

ஏலுமெண்டால் வாங்க பாப்பம்???

ஏலும் எண்டால் வாங்கோவன் பார்ப்பம் !
ஏலும் எண்டால் எங்களை ஒருக்கால் நல்லது கதைக்க சேர்த்துப் பாருங்கோவன் பார்ப்பம்!
நாங்கள் யாரு தெரியும் தானே!! எங்களைப் போல யாராளையும் உங்களை பேக்காட்ட முடியுமே!
நாங்கள் வெளியால அப்பிடி தான் கதைப்பம்!
உள்ளுக்குள்ள எங்களுக்கும் நடுங்குமெல்ல!
நாங்கள் எங்களுக்குள்ள மேடையில பேசேக்குள்ள பகிரங்க விவாதத்துற்கு அழைப்பம்!
அதை நீங்கள் நம்பிறதே!!!
ஹையோ!!! ஹையோ!!!
😀😀😀😀😀😀
மேடேல கதைக்கேக்க ஆர்வக் கோலாறுகள் சிலதுக்காக நாங்கள் அடிக்கிற பம்பல் கதையளையும் நம்பிறியளே!
நாலு பேர் கைதட்டோனும் என்று வாய்க்கு வந்ததை நாங்கள் அடிச்சு விடுறது!
அதைப் பிடிச்சு வைச்சுக் கொண்டு பகிரங்க விவாதம் என்று போஸ்டர் அடிச்சுக் கூப்பிட்டால்…!!!
குப்புன்னு வேர்க்குமெல்ல!!!
😀😀😀😀😀
நாங்கள் போடிற கூட்டங்களை கவனிக்கிறனியலோ???
யார் கேள்வி கேட்கமாட்டாங்களோ அங்க தான் நாங்கள் கூட்டம் போட்டு கத்துவம்!!!
அல்லது
இந்த விளையாட்டுக் கழக பெடியள் கூப்பிட்டா 4 பற்றும் 5 பந்தும் கொண்டு போய் குடுத்து அவங்களை கேள்வி கேட்கவிடாமல் பண்ணிடுவம்!!!
நீங்கள் இப்பிடி பகிரங்க விவாதம் எண்டு கூப்பிட்டால்…!!!
குப்புன்னு வேர்க்குமெல்ல!!!
😀😀😀😀😀
கொள்கையே இல்லாமல் தமிழ் தேசிய கொள்கையை சொல்லிச் சொல்லி பேக்காட்டிக் கொண்டு ஏதோ ஐஞ்சு பத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறம்!!!
அதில மண்ணள்ளிப் போடிறமாதிரி எங்களை பகிரங்க விவாதத்திற்கு வா எண்டால்….!!!
குப்புன்னு வேர்க்குமெல்ல!!!
😀😀😀😀😀
ஒரே கொள்கையுடைய இரண்டு பேர் சேர்ந்து கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம் என்றால் அதுக்கே மணித்தியாலக் கணக்காகும்!!!
கொள்கையே இல்லாமல் சுத்திக்கொண்டு ஒருத்தனை ஒருத்தன் குற்றம் சொல்லிக் கொண்டு தேர்தல் வரைக்கும் பம்மாத்திக் கொண்டு திரியிற எங்களை பகிரங்க விவாதத்திற்கு வா எண்டால்…!!!
குப்புன்னு வேர்க்குமெல்ல!!!
😀😀😀😀😀
ஒருத்தருமே இல்லாத இடத்தில் ஒருத்தன் மட்டும் வந்து நிண்டு கொண்டு,
அவன் செய்யிற அளப்பறை தாங்கவே முடியுதில்லை!!!
அடே !!! உங்களை விலங்குகளின்ர பெயரை சொல்லி கூப்பிடலாம் என்றால் அதுகள் பாவம்!!!
அட மானங்கெட்ட மனித கூட்டமே!!!
தமிழ் தேசியத்தை நேசிக்கும் ஒருவன் இப்போதுள்ள உங்கள் கூத்துக்களை நேசிக்க மாட்டான்!!!
உங்கள் கூத்துக்களால் உடையப்போவது எங்கள் தனித்துவமான வாக்குகள் மட்டுமே!!!
வாக்குகளை சின்னாபின்னமாக்கி இனிவரும் காலங்களில் சிங்களப் பிரதான கட்சிகளை தமிழர் தாயகங்களில் இருந்தும் பாராளுமன்றம் அனுப்பிவைக்கப் போறியள்!!!


VTamil குழுமத்தினால் கொடுக்கப்பட்ட விளக்கம்


மக்கள் மன்றில் ஓரணியாக நிற்க முன்வராதவர்கள்,எவ்வாறு பாராளுமன்றில் தமிழர் தரப்பை ஓரணியாக பிரதிநிதித்துவப்படுத்தப்போகிரார்கள். ????
கட்சி பிரதிநிதிகள் கேட்கிறார்கள் இல்லை,பிரசார கூட்டங்கள் காரணமாக பிரதிநிதிகளை பிரேரிக்க முடியவில்லை - திரு.விக்னேஷ்வரன்
கட்சி வேலைகள்,பிரசார பணி நிமித்தம் கலந்துகொள்ள முடியாதுள்ளது - திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
கஜேந்திர குமார் கலந்து கொண்டால் நானும் வருகிறேன் - திரு.சுமந்திரன்.




இந்தப் பகிரங்க விவாதம் தொடர்பாக முகப்புத்தகங்களில் வாசித்த சில பதிவுகளையும் இணைக்கிறேன்.

கஜேந்திரகுமார் வரமாட்டார் என்பதால் தங்கள் தரப்பில் சுகாஸ் காண்டிபன் வருவதாக க.குமார் அறிவித்தாராம். அப்படி என்றால் தங்கள் தரப்பிலும் சுமந்திரன் வராமல் இரண்டு பிரதிநிதிகளை அனுப்புவதாக சுமந்திரன் சொன்னதால் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள்.
விக்னேஷ்வரன் எந்த பதிலும் வழங்கவில்லை. என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.
கட்சியின் பொறுப்பு கூறக்கூடியவர்கள் பங்குபற்றுவதன் மூலம் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேசுவது தான் ஏற்பாட்டாளர்களின் நோக்கம். அடுத்த ஐந்தாண்டுகால திட்டத்தை பற்றி பேசுவது.
யாழ்பாணத்தின் அடிப்படை தேவைகள்,பிரச்சனைகள் தொடர்பில் ஆய்வுசெய்து வைத்திருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்கிறார்கள்.
ஆக சில்லறை தனமான விவாதமாக இல்லாமல் ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒழுங்கு செய்திருக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.
அதை சில்லறை தனமாக கையாண்டது க.குமாரும் விக்னேஷ்வரனும்.
அதை சில்லறை தனமாக உருட்டுவது சுகாஸ்.
சுகாஸ் உருட்டினதை சில்லறைத்தனமாக உருட்டுவது தொண்டரடிப்பெடியல்.
தனிய தீர்வு இனப்பிரச்சனை என்று மட்டும் கூவிட்டு திரிஞ்சா கோவணமும் போயிரும், மக்களின் இருப்புக்கான விடையங்களையும் சிந்திக்கோனும்.
அதைவிட்டிட்டு செம்மறி கூத்துகள்.
மக்களுக்கான உருப்படியான செயற்திட்டம் இல்லை.


நேரடி விவாதம்- நிகழ மறுக்கும் அதிசயம்!
கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்களின் கூச்சல்கள் குழப்பங்கள் அற்ற நிலையில், தெளிவான நிகழ்ச்சி நிரலோடும், வரையறைகளோடும் ஒழுங்கமைக்கப்படும் நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சிகள் தமிழ் அரசியலில் சூழலில் நிகழ்வதே இல்லை. அப்படியான ஆரோக்கியமான விவாதங்கள் தமிழ் அரசியலில், குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் ஆரம்பிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கின்றது. அப்படியொரு விவாத நிகழ்வு இன்று நிகழும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அது நிகழ மறுக்கும் அதிசயமாகவே போயிருக்கின்றது.
தேர்தல் கால நேரடி விவாதங்களில் நெறிப்படுத்தல்கள், வரையறைகளுக்குள் நின்று விவாதிக்கும் அளவுக்கான மனநிலையை எந்தவொரு அரசியல் தலைவரும் வளர்த்துக் கொள்வது சார்ந்து ஆர்வம் கொள்வதில்லை. தங்களுக்கு தோதான களத்தில் நின்று ‘கத்தி ஓய்வது’ குறித்தே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். அதுதான், அவர்கள் அளவில் பாதுகாப்பானது என்றும் கருதுகிறார்கள். அதனை, அவர்களின் ஆளுமை குறைபாடு என்று கொள்ள முடியும்.
‘V தமிழ்’ குழு யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தவிருந்த, விவாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை கலந்து கொள்ளுமாறு அழைத்திருக்கின்றது. கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் அழைக்கப்பட்டிருக்கின்றார். அவர், காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டால், தன்னால் பங்கேற்க முடியும் என்றிருக்கிறார். கஜேந்திரகுமாரும் சுமந்திரன் கலந்து கொண்டால் தானும் கலந்து கொள்வதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் உறுதியளித்திருக்கின்றார். விக்னேஸ்வரனோ, கூட்டணியின் ஏனைய முக்கியஸ்தர்களோ விவாதத்தில் கலந்து கொள்வது சார்ந்து ஆரம்பம் முதல் பின்னடித்திருக்கின்றனர். (விக்னேஸ்வரன், கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பது சார்ந்து தொடர்ச்சியாக பின்னடிப்பவர். அதுதான், கேள்வி- பதில் அறிக்கைகளில் அவர் தங்கியிருப்பதற்கு காரணம். அவரிடம் நேரடி விவாதமொன்றுக்கான அழைப்பு விடுக்கப்படுவது வேண்டாத வேலை. அவர் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார்.)
ஆக, சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையிலான மற்றொரு நேரடி விவாதம் நிகழும் வாய்ப்பு உருவாகியிருக்கின்றது. ஆனால், ஒரு கட்டத்தில் கஜேந்திரகுமாரும் கழன்று கொள்ள நிகழ்வு இரத்தாகியிருக்கின்றது. கஜேந்திரகுமார் தனக்குப் பதிலாக இருவரை பிரேரித்திருக்கின்றார், ஆரம்பத்திலேயே கஜேந்திரகுமார் கலந்து கொண்டால் தானும் கலந்து கொள்வதாக அறிவித்த சுமந்திரன், கஜேந்திரகுமாரும் விலகிக் கொண்ட நிலையில், தானும் இருவரை பிரேரித்திருக்கின்றார். ஆக, இந்த விவாதத்தில் யார் யார் எப்போது, என்ன காரணங்களுக்காக விலகியிருக்கின்றார்கள் என்பதை சரியாக புரிந்து கொள்ளலாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி இரத்துத் தொடர்பில் தெளிவுபடுத்தி காணொலியையும் வெளியிட்டிருக்கின்றார்கள்.
சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் கடந்த பொதுத் தேர்தல் காலங்களில் நேரடி விவாதங்கள் இரண்டு இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அவை ஆதரவாளர்கள், தொண்டர்களின் கூச்சல்களினால் சரியான நிகழ்வுகளாக அமைந்திருக்கவில்லை. அத்தோடு, அந்த நிகழ்வுகளில் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலும் இருக்கவில்லை. ஒருவகையில், குறிவைத்து திட்டமிட்டு தாக்கும் நிகழ்வுகளாகவே அவை முடிந்திருக்கின்றன. அப்படியான நிலையில், இன்றைய நிகழ்வினை ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்த்திருக்கும் தரப்புக்கள் எதிர்பார்ப்பது இயல்பானதே.
ஆனால், நேரடி விவாதமொன்று வெற்றி- தோல்வி என்கிற கட்டத்தினுள் மட்டும் வைத்துப் பார்க்கப்படும் மனநிலையினால், நிகழ முடியாமல் போயிருக்கின்றது. ஆரோக்கியமான விவாதமொன்றுக்கான கடப்பாடுகள், வரையறைகள் சார்ந்து அரசியல் தலைவர்கள் மாத்திரமல்ல, அவர்களின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் கூட தேடி அறிந்து கொள்ள வேண்டும். அதுதான், அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். அதனைச் செய்யாதுவிட்டுவிட்டு, சமூக ஊடகங்களில் உண்மை தெரிந்த பின்னரும் சமாளிப்புக்களைச் செய்வது என்பது, ஒரு வகையிலான இயலாமை. அந்த இயலாமையை அரசியலின் ஒரு கட்டமாக கொண்டு நடக்காதீர்கள். அது உங்களை நிச்சயமாகத் தோற்கடிக்கும். தேறுவதற்கான வாய்ப்புக்களை மறுதலிக்கும். ஏனெனில், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

தமிழ் தேசிய முண்ணனி சார்பில் சுகாஸ், காண்டீபன் ஆகிய இருவரும் பங்கு பற்றும் நிலையில் ஏன் கூட்டமைப்பு சார்பில் சுமந்திரன் பங்கு பற்றமுடியவில்லை. கட்டாயம் கஜேந்திரகுமார் தான் வேணும் என்று ஏன் ஆடம் பிடிக்கவேண்டும்?
இதை ஒரு தம்பி கேட்டிருந்தார்.
தம்பி சுகாஸ் பற்றி அனைவருக்கும் தெரியும், மிக சிறந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர். ஆனால் வாதாடல் நிகழ்வு என்று வந்துவிட்டால் அது வாக்கு வாதம் அளவுக்கு செல்லும். மூச்சை பிடித்து தம் கட்டி கொண்டு அவர் பேசும் தோரணை அது ஒருவகை பட்டிமன்றம் போன்ற தன்மையை கொண்டுவரும். அது ஒரு இயல்பான அரசியல் கலந்துரையாடல் போன்று நிச்சயம் இருக்காது.
இதை சுமந்திரன் விரும்புவதில்லை. அல்லது ஆள் பட்டிமன்றத்தில் அவ்வளவு கெட்டிக்காரர் இல்லை.
காண்டீபன் அவர்கள் பற்றி சொல்ல தேவையில்லை. அவர் ஒரு பிழைக்கான மன்னிப்பை கூட கவிதையில் சொல்லி கழுத்தறுப்பார் . ஆகவே சுமந்திரன் ஒரு கவிஞர் அல்ல. அதனால் அவரை தவிர்க்க விரும்பி இருக்கலாம்.
எதிரில் யாருடன் வாதாட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு.
ஆகவே இங்கு கஜேந்திரகுமார் அவர்கள் இன்றைய திருநெல்வேலி கூட்டத்துக்கு காண்டீபனை அனுப்பிவிட்டு அவர் அந்த நிகழ்வுக்கு சென்று இருக்கலாம்.
இது ஒரு தவறு அல்லது திட்டமிட்ட தவறு . அவ்வளவு தான்.


விக்கினேஸ்வரனுக்கு பதில் சொல்லத் தெரியாது ஓகே, கஜேந்திரகுமார் ஏன் வராமல் ஓடினார் என்று கேட்கிறார்கள். எனக்கு அதில் ஒரு ஆச்சரியமும் இல்லை என்றேன்.ஏன்?
நிகழ்வு எதைப்பற்றியது?
-அடுத்த ஐந்து வருடத்தில் தமிழருக்கு என்ன செய்வீர்கள், என்ன ப்ளான் என்பது பற்றியது.
முன்னணியின்(காங்கிரஸின்) கொள்கை என்ன?
-ஒரு நாடு இருதேசம்
அடுத்த 5 வருடங்களில் இந்த தனித் தேசகோஷம் தொடர்பில் என்ன measurable முன்னேற்றம் காட்டமுடியும்?
-ஒன்றுமில்லை
தட்டுத்தவறி ஒரு சீட் வென்றால், அதைவைத்து அரசுடன் எந்த பேரம்பேசல் செய்ய முடியும்?
-ஒன்றுமில்லை.கணக்கே எடுக்காமல் கடந்துபோவார்கள்
கூட்டமைப்பு தொடர்பிலான இவர்களின் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது என்ன?
-தீர்வு தொடர்பில் எந்த measurable முன்னேற்றமும் செய்யவில்லை என்பது.
அடுத்த 5ஆண்டுகளில் முன்னணி தன் கோஷம் தொடர்பில் அடையக்கூடிய அடைவு என்ன என்று சொல்லமுடியும்?
-தீர்வு தொடர்பில் பல இடங்களில் வலியுறுத்தினோம் என்று சொல்லமுடியுமே தவிர வேற எதுவும் செய்யமுடியாது.
அப்ப இதுக்கும் கூட்டமைப்பின் பதில்களுக்கும் என்ன வித்தியாசம்?
-ஒன்றுமில்லை. கூட்டமைப்பாச்சும் எதோ ஒரு சாத்தியமான யாப்புருவாக்கத்தில் பயணித்தது. முன்னணி பூகோள அரசியல் வகுப்பெடுக்கத்தான் சரி.2009லயே வராத அமெரிக்காவும் இந்தியாவும் இனியுமா வந்து தூக்கிப்பிடிக்கப்போகுது.
அப்போ அடுத்த 5 வருஷங்களில் தீர்வு எடுத்து குடுக்க முடியாது. தீர்வு இல்லாமல் அபிவிருத்தியும் தேவையில்லை என்றார்கள், ஆக அபிவிருத்தியும் இல்லை.அப்போ அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு எந்த உறுதிமொழியை கொடுப்பார்கள்?
-ஒன்றுமில்லை. கூட்டமைப்பை குற்றம்சாட்டுவதை தொடர்ந்து செய்வோம் என்று வேண்டுமானால் உறுதிமொழி கொடுக்கலாம்.
அதுக்கு எதுக்கு இவர்கள்?டக்ளஸும் அங்கஜனும் போதுமே?
-ஆமாம்.
கூட்டமைப்பை குறை சொல்வதை விடுத்து, தங்களின் அரசியல் கோஷம் என்ன, அதை எப்படி எப்போ,எந்த சாத்திய வழியில் அடையப்போகிறார்களென்றோ, எதிர்ப்பதை மட்டுமே செய்யாமல் “பெரும்பான்மைத் தமிழ்” மக்களின் எதிர்பார்ப்பை எப்படிப் பூர்த்தி செய்யப்போகிறார்கள் என்றோ,இதுதான் எங்க பிரச்சனை என்று மாற்று சமூகத்தினருடனோ இவர்கள் எப்போதாவது விளக்கிப் பார்த்திருக்கிறீர்களா?
-இல்லை
இப்ப புரியுதா ஏன் வரலைனு? கடந்த வரலாறு பற்றி கதைக்காமலோ, கூட்டமைப்பை குறை சொல்லாமலோ, மக்களுக்கு என்ன செய்வோம், தீர்வை எப்படி எடுப்போம் என்பதுதொடர்பில் சாத்தியமான வழிமுறைகளோ கைவசம் இல்லை. பின்னர் எப்படி எதிர்காலம் தொடர்பில் சடையாத கட் அண்ட் ரைட் பதிலை கொடுக்கமுடியும்? சடைஞ்சு சடைஞ்சு பூகோள அரசியல் பேசலாம்.ஒரு கேள்வி கேட்டால் கேள்வியையே மறக்கடிக்கிறமாதிரி பதில் அலட்டலாம்.மூன்று நிமிஷத்தில் அரசியல் தீர்வுக்கான வழிமுறையைச் சொல்லச்சொன்னால் எப்படிச் சொல்வது? அதுக்கு பதிலா வெடிமுருகேசனை அனுப்பினால் விவாத நடுவில் சுமந்திரனை அடுத்த தேசியத்தலைவர் எண்டு அடிச்சுவிடுவான்..அதை வைச்சு கொஞ்ச அரசியலாச்சும் செய்யலாமே என்று கஜேந்திரகுமார் நினைத்ததில் தப்பில்லையே.!