Thursday, July 14, 2011

சமூகச் சீர்திருத்தவாதியுடன் ஓர் தொலைபேசி உரையாடல்....

அன்பார்ந்த சேர்க்கையின் அபிமான வாசகர்களே!!
இங்கு ஓர் பிரபலமான ஊடகவியலாளர், மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஒருவருடன் அவரினுடைய தளத்தினைப் பற்றிய உள் நோக்கங்கள் மற்றும் உன்னதமான அவருடைய படைப்புக்கள் பற்றியும் விரிவாக அவருடனேயே கலந்தாஅலோசிக்க உள்ளோம். அவருடனான தொலைபேசியிலான உரையாடல் உங்கள் பார்வைக்கு……
சேர்க்கைகள்     : வணக்கம் சீர்திருத்தவாதியே!!
நியூயாழ்ப்பாணம் : ஆமாம், வணக்கம்! வணக்கம்! என் உடன் பிறந்த தமிழ்  இரத்தங்களே வணக்கம்!
சேர்க்கைகள்     : என்ன வணக்கமே பலமாக இருக்கிறது?? தமிழ்ப்பற்றும் தாய்ப்பற்றும் அதிகமோ??
நியூயாழ்ப்பாணம் : இல்லாமல் இருக்குமா என்ன? இவளவு குறுகின காலத்தில என்னை பிரபலமாக்கினது எண்ட மக்கள் தான.. இந்த சந்தர்ப்பத்தில அவங்களுக்கு எண்ட நன்றிய சொல்லிக்கிறன். குறிப்பா இளைஞர்களுக்கு எண்ட சொல்லிக்கிறேன்…
சேர்க்கைகள்     : இளைஞர்களுக்கா அவங்களுக்கு எதுக்கு??
நியூயாழ்ப்பாணம் : ஓமோம், அவங்களுக்குத்தான்.. என்ர நியூசுகள் எண்டு எடுத்துப் பார்த்தியல் எண்டா தெரியும் பொதுவா எல்லாத்துக்கும் அவங்கள் தான் கதாநாயகர்களா இருப்பாங்கள்... இடக்கிட பெருசுகள பத்தியும் போடுவன். பிறகு அதுகளிண்ட மனசு நோகக்கூடாது பாருங்கோ அதுதான்..
சேர்க்கைகள்     : நல்ல உயர்ந்த நோக்கம்.. ஆமாம் உங்கள் நியூஸுக் கெல்லாம் இளைஞர்கள் தான் ஹீரோ என்றீங்கள் அது எப்படி??
நியூயாழ்ப்பாணம் : ஆம். பொதுவா பாத்தீங்க என்றால்…..
சேர்க்கைகள்     : ஆ… நாங்க பார்த்திருக்கோம்..
நியூயாழ்ப்பாணம் : நான் என்னும் சொல்ல வெளிக்கிடேல….அதாவது பொதுவா பாத்தீங்க எண்டா, எங்கட பெடியல் எங்க எங்க கூட்டமா நிக்கிறாங்களோ உடன படம் எடுத்திடுவன்... பிறகு அந்த படங்களை என்ர தேவைக்கேற்ற மாதிரி மொடிஃபை பண்ணீடுவன்… எனக்கு கொஞ்சம் கற்பனைவளம் கூட…  
சேர்க்கைகள்     : ஆமாம்.. அது சரி… உங்களுக்கு கற்பனைவளமும் கூட காமவளமும் கூடத்தான்…
நியூயாழ்ப்பாணம் : என்ன!! என்ன சொல்றீங்க காமவளமா???(கோவமாக..)
சேர்க்கைகள்     : இது என்னுடைய கதையில்ல பொதுவா கதைச்சத சொன்னன்…
நியூயாழ்ப்பாணம் : நல்லா பொதுவா கதைச்சாங்க… ஏனெண்டா எங்கட ஆக்கள் சினிமா பார்க்கிறேல தானே.. அதில டபிள் மீனிங்ல சொன்னா கைதட்டி சிரிக்கிறேலயா??? அதுமாதிரி தான் இதுவும்..
சேர்க்கைகள்     : அது சினிமா… அதில ஒருத்தரயும் குத்திக்காட்டி டபிள் மீனிங்கில கதைகிறேலதானே… ஆனா நீங்க அப்பிடியா??? யாழ்ப்பாணம் எண்டீங்க.. பொம்பிளையள் எண்டிறீங்க..
நியூயாழ்ப்பாணம் : ஓம்!! யாழ்ப்பாணம் என்ர இடம் அங்க நடக்கிற அக்கிரமத்த கண்டு என்னால சும்மா இருக்கேலாது தானே.. வெளிநாட்டில இருந்தா தான் அந்த அருமவிளங்கும் உங்களுக்கெல்லாம்…
சேர்க்கைகள்     : அப்போ வெளிநாட்டுக்கு போனா தான் உங்களுக்கெல்லாம் தேசப்பற்றுவரும்… உங்கட சமூகத்தில அக்கறவரும் அப்பிடிதானே…???
நியூயாழ்ப்பாணம் : ஓம்…. எப்பவும் விலத்தி இருக்கேக்க அன்புவாறது கூடத்தானே???
சேர்க்கைகள்     : உங்களுக்கு அன்பு வந்ததுக்காண்டி றோட்டில நிக்கிறது போறதெல்லாத்தயும் படமெடுத்து உங்கட பப்பிளிசிட்டிக்காக போடிறதில என்ன நியாயம் இருக்கு…
                ஒரு பொம்பிளயும் ஆம்பிளயும் கதைச்சாலே தப்பா??? அதுவும் உங்களுக்கு கலாசாரச் சீர்ழிவோ???
நியூயாழ்ப்பாணம் : ஓ… நீங்க அப்பிடிவாறியல்… இஞ்ச பாருங்கோ… எனக்கும் தேசப்பற்று இருக்குத் தான் அதுக்காக நான் காசுகட்டி எடுத்த இணையத்தளத்த என்ன செய்யிறது.. அதுக்கு வருசம் வருசம் காசுகட்ட நான் என்ன செய்யிறது… இப்பிடி ஏதாவது போட்டா தான எங்கடயல் பாக்குதுகள்… எங்க ஒருக்கா சும்மா ஒரு ஆர்டிக்கல் போட்டுப் பாருங்கோபாப்பம்…
சேர்க்கைகள்     : அதுக்காக… யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணை தன் உடம்பால் ‘அயன்’ பண்ணும் ‘கிழடு’.. இப்படியா தலயங்கம் போடுவீங்க…
நியூயாழ்ப்பாணம் : பின்ன எப்பிடி போடுறது… “ யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் மக்கள் செல்வது கடினகாக உள்ளது… இ.போ.சவின் பேருந்து பற்றாக் குறையே இதற்குக் காரணம்..” இப்பிடி தலயங்கம் போட்டா எவன் வந்து பாப்பான்.. அப்பிடி (யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணை தன் உடம்பால்  ‘அயன்’ பண்ணும் ‘கிழடு’..) தலயங்கம் போட்டாத்தான் சனம் வந்து என்ன ஏதெண்டு பாக்கும்.. இதெல்லாம்  ஒரு தந்திரம் தம்பி உனக்கு விளங்காது…
சேர்க்கைகள்     : சரி… அது எங்களுக்கு விளங்காமல் இருக்கும் வரைக்கும் தான் உங்களுக்கு நல்லது… ஓகே. உங்கள் ஆர்டிக்கல்களில் ஆபாசமான வரிகள் இடம் பெறுவதாகக் கூறுகிறார்களே.. அதைவிட நீங்கள் காமத்தளம் ஒன்று உருவாக்கி இருக்கலாமாம்…  இதுபற்றி உங்கள் கருத்து…
நியூயாழ்ப்பாணம் : நீங்க கேக்காட்டியும் இது சொல்லனும் எண்டுதான் இருந்தனான்… அதாவது இங்க(வெளிநாடுகள்) செக்ஸ் என்றது ஒரு சின்னவிசயம்… ஆனா எங்கட ஊருகள்ள இதப்பற்றி கதைச்சா துலஞ்சுதுகத… ஏதோ கொலபண்ணிப் போட்ட மாதிரி பாப்பாங்கள்… அதுக்காக தான் இப்பிடி எழுதினா செக்ஸ் ரீதியாயும் எங்கட சனத்த முன்னேத்தலாமெல்லோ… அது தான்.., நீங்க கேட்டியல் தானே எதுக்கு அம்பிள பொம்பிள போட்டோ எல்லாம் எடுத்து போடிறியல் எண்டு… இதுக்கு தான் இப்ப விளங்குத…

                ஒன்டு சொல்லனும் தம்பி அங்க இருந்து போட்டோ… வீடியோ எடுத்து அனுப்பிற பெடியல பாராட்டனும்… சும்மா எங்கயோ எங்கயோ எல்லாம் பூந்து பூந்து எடுக்கிறாங்கள்… இந்த நேரத்தில அவங்களுக்கும் என்ர பாராட்டுகள்… குடுக்கிற காசுக்கேற்ற மாதிரி நல்லா வேலசெய்யிறாங்கள்…

                தொழிலாளிய சந்தோசப்படுத்தினா தான் விசுவாசிகளா இருப்பாங்கள். என்ன தம்பி நான் சொல்றது சரிதானே தம்பி???

                மற்றது காமத்தளம் பற்றி சொன்னீங்க என்ன…………??? காமத்தளம் என்றால் நிறய இருக்குது… அதவிட நான் இந்த தள வாசகர்களை கேட்ட உங்க இடத்தில நடக்கிற கலாசார போட்டோ வீடியோ எதுக்கு தெரியுமா??? அதில ஆம்பிளயும் பொம்பிளயும் கிட்ட நிக்கிற மாதிரி இருந்தா சரி எனக்கு அந்த இடத்தில அப்பிடி இப்பிடி விடயம்  நடக்குதென்டு எழுதீட்டா சனம் அதையும் பார்க்கும் வாசிக்கும்… அது வாசிக்கும் போது சனத்துக்கு ஒரு கிலுகிலுப்பு வருமெல்லோ… சும்மா ஒரு நியூசெண்டா பேப்பரை வாங்கி படிக்கலாம்… மினக்கட்டு என்ர தளத்த பார்க்க வார்றவங்கள நான் திருப்திபடுத்த தான வேணும். அப்ப தான திரும்ப திரும்ப வருவாங்க…

சேர்க்கைகள்     : ம்ம்….ம், அப்ப போட்டோ வீடியோ எடுக்கிறது மட்டும் தான் அவங்கள்.. மிச்சமெல்லாம்…???
நியூயாழ்ப்பாணம் : அதெல்லாம் நான் தான் தம்பி.. வெட்டிறது… பொருத்திறது… எழுதிறது… எல்லாம் நான் தான்… ஒருத்தனையும் கிட்ட வைச்சிருக்கிறேல… ஒருத்தனயும் நம்பக்கூடாது… ஒன்டு சொல்லப் போனா உங்க நிக்கிறவங்களுக்கு என்ர முகம் கூட தெரியாது… பிறகு நான் உதுகல கிட்ட வைச்சுக் கொண்டு செய்ய, கடைசில நித்தியானந்தா சுவானின்ர நிலைதான் எனக்கும் வரும்…
      
                வேற என்ன தம்பி…. உங்கட தளம் எல்லாம் எப்பிடி போகுது… உங்கடயையும் பப்ளிசிட்டி பண்ணணும் எண்டால் என்ரய பார்த்து ஃபொலோ பண்ணுங்கோ…
சேர்க்கைகள்     : ம்ம்…ம் , பாப்பம், பாப்பம்….. நன்றி.
நியூயாழ்ப்பாணம் : தம்பி ஒரு சந்தேகம்….??? நான் கதைச்சத உங்கட தளத்தில போட்டிட மாட்டியல் தான….
                ……
                ……
                என்ன தம்பி சத்தத்தக் காணோம்… ஹலோ…. ஹலோ……










No comments:

Post a Comment