Thursday, August 4, 2011

காதலித்துப்பார்......

உன்னைப்பற்றி சிந்திப்பதைவிடுத்து
பிறரைப்பற்றியே சிந்திக்கத் தொடங்குவாய்..
உன்னுடன் நெருங்கியவர்களுடன் கூட
சந்தேகத்துடனேயே பழகுவாய்...
உன் சிந்தனையும் செயல்களும்
வேறுபட்டே இருந்தாலும்..
இறுதியில் அணைத்தும்
ஒன்றிலேயே முடிவடையும்..
உன்னைச் சுற்றி ஒரு கூட்டமே திரியும்
நீ பலரால் கல் எறியப்படுவாய்...
எறிந்த கற்களைக் கொண்டு
புதிய வீடுகட்ட முயற்சியும் எடுப்பாய்..
தொலைபேசி அழைப்பு கேட்டவுடன்
உன் காதும் சூடாக ஆரம்பிக்கும்..
“ஹலோ” என்று தொடங்கிய உனக்கு
“ம்ம்ம்” என்ற வார்த்தையே
இறுதியில் மிஞ்சும்..
அழைப்புக்கள் அனைத்தும்
ஒரே பெயரில் இருந்தே
வரவேண்டும் என்று ஆசைப்படுவாய்..
உன் பெயர் “செல் போனில்”
புதுப்பொழிவுடன் உருமாற்றம் பெறும்..
பெண் “ நண்பன்” ஆக்கப்படுவாள்..
ஆண் “ நண்பி” ஆக்கப்படுவான்...
நித்திரைக்குப் பின்னும் போர்வைக்குள்
முணு முணுப்புச் சத்தம் கேட்கும்..

காதலித்துப்பார்........
இருண்ட இரவுகளுக்குள் கூட
உன் காதருகே மாத்திரம்
ஓர் ஒளி வீசும்.

அதற்கு,
காதலித்துப்பார்.

                                                                                                                     தொகுப்பு :-இ.சுகானன்.



No comments:

Post a Comment