Tuesday, August 30, 2011

புரியாத புதிராக மாறியுள்ள கிறீஸ் மனிதர்கள்....???

இன்று அனைவராலும் பரவலாக பேசப்படும் விடயம் “கிறீஸ்” மனிதர்கள். யார் இவர்கள் ?? எங்கிருந்து உருவாக்கப்பட்டார்கள்?? யாருக்கும் தெரியாத ஒரு புதிர். ஆனால் அவ்வாறான மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டவர்கள் பலர் உள்ளனர். ஆரம்பத்தில் இக் “கிறீஸ்” மனிதர்கள் இலங்கையின் மகியங்கனைப் பகுதியில் இருந்தே உருவாக்கப்பட்டனர். காரணம் அங்குள்ள “துட்டகைமுனு” மன்னன் காலத்து அவனால் பாவிக்கப்பட்ட பொருட்கள் எடுக்கும் நோக்கில் அவதரித்தவர்களே இவர்கள் என்ற செவிவழிக் கதை ஒன்று உலாவுகிறது. ஆனால் மகியங்கனையில் அவர்களின் அட்டகாசம் நடந்ததற்கான பதிவுகள் எதுவும் இல்லை. 

இதன் பிறகு அவ் மனிதர்களின் செயல்பாடு மலையகங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டது. அதுவும் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் இவர்களின் அடாவடித்தனம் இடம்பெற்றது. இதன் பிறகு இது இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு இடம்மாற்றம் பெற்றது. 

புதையல் எடுப்பதற்கென உருவாக்கப்பட்ட இவ் மனிதர்கள் எமது ஆர்வலர்களின் பார்வையில் அரசியல் ஆக்கப்பட்டது. “ மகிந்தரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதற்கு பரிகாரமாக ஒரு குறிப்பிட்ட தொகை பெண்களின் இரத்தம் தேவைப்படுவதாகவும் இதற்காகவே அப்படியான மனிதர்கள் உருவாக்கப்பட்டார்கள்” என்று இக் கதை தொடர்கின்றது. 

“ நாலு பேரின் இரத்தத்தை குடிச்சு தான் நீ உயிர் வாழ வேண்டுமா ?? ”  என்றாற் போல் அவரின் அன்பிற்குரிய தம்பி ஓர் அறிக்கை விட்டார்.. “ அண்ணணிற்கு இரத்தம் கேட்டால் கொடுப்பதற்கு ஆயிரம் பேர் இருக்கிறாங்க , எதுக்கு நாங்க இப்படி ஓரு கீழ்த்தரமான வேலைய செய்யனும்..” இவர் கதைக்கிறது உண்மையாக இருந்தாலும் இவரும் ஓர் அரசியல்வாதி என்பதால் என்னவோ இவரின் கதையை நம்புவதாக எவரும் இல்லை. சொல்லிப்பார்த்தார் கேட்கவில்லை... அடங்கிவிட்டார்...

தென் இலங்கையை பொறுத்தவரை இவரின் கூற்று ஏற்கத்தக்கது. மகிந்தருக்கு இரத்தம் கொடுக்க அவர்கள் வருவார்கள் என்பது அப்பட்டமான உண்மை.

உண்மையில் இந்த பூதங்களின் பின்னனி என்ன???  ஊரிலுள்ளவர்கள் இந்த பூத மனிதர்களை பிடிப்பதற்காக துரத்திச் செல்லும் போது அவர்கள் இராணுவமுகாம்களுக்குள் சென்று மறைவதாக சொல்கின்றார்கள். இதனால் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு இதனால் மக்கள் பெரிய இடர்களை அடைந்தது அனைவரும் அறிந்த ஓர் விடயம்.

இங்கு எனது அலசல் என்னவெனில் “மலையகங்களில் இந்த மனிதர்கள் புதையலை எடுப்பதற்கும்” “ வடக்கு கிழக்கில் இம் மனிதர்கள் மகிந்தருக்கு உயிர்ப் பிச்சை கொடுக்கவும் இரத்தம் எடுக்கிறார்களா??”

இராணுவ முகாம்கள் இல்லாத மலையகத்தில் இவர்கள் எங்கு சென்று ஒழிந்து கொள்கிறார்கள் ?? சிலவேளை மலையகங்களிலும் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக இவ்வாறு செய்கிறார்களோ?? 

செய்யிறதுக்கு ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருந்தா ஏதேதோ எல்லாம் நினைக்க தோன்றும். எங்களின் கற்பனைக் குதிரைக்கு கடிவாளம் போடவே முடியாது. அப்படித்தான் சிலபேரின் கருத்து..


“தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்”  மேலுள்ள பதிவினை வாசித்துப் பார்த்தால் இவர்களை பாராளுமன்றம் வரை அனுப்பிவிட்ட நாங்கள் அனைவரும் பைத்தியக்காரர்கள் என்று நினைக்கிறார் போலும். 

இப்படியானவர்கள் கைகளில் ஒரு தாளத்தைக் கொடுத்து கோயில்களில் பஜனை பாட அனுப்பி வைக்கலாம். நன்றாக தாளம் போடுவார்கள். 

இன்னொரு இணைப்பு இதோ...



(வடக்கில் “கிறீஸ்” மனிதர்களின் செயற்பாடு தொடங்குமுன் வெளியிடப்பட்ட கானொளி. நன்றி-youtube)

அமெரிக்க இராணுவப் பாணியில் இராணுவத்தின் இச்சையைப் போக்க இராணுவத்திற்கு அரசு வளங்கிய மானியமாம். அதற்கு எம் பெண்களின் இரதமா தேவைப்படுகிறது. உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களின் இரத்ததைக் குடிக்க வேண்டியது தானே.!!! எதுக்கு அடுத்தவன்ரைய எடுக்கிறீங்க. ஆக இப்படியான பலதரப்பட்ட கதைகள் உலாவிவருகின்றன. 

ஆனால் இந்த ஓர் மர்ம மனிதனை வைத்து தமது சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் போவது நிச்சயம். சிலகாலமாக யாழ்ப்பாணத்தில் இல்லாதிருந்த திருடர் கலாச்சாரம் மீண்டும் துளிர் விட்டுள்ளது. அண்மையில் யாழ் இணுவில் கந்தசுவாமி கோவிலில் திருடர் கும்பல் மக்களால் பிடித்து தாக்கப்பட்டுள்ளனர். 

தமது சொந்தப் பகைகளை பூர்த்தி செய்யவும் பெண்கள் மீது துஸ்பிரயோகம் செய்யவும் இந்த கிறீஸ் மனிதர்கள் நல்ல உதவி செய்யப்போகிறார்கள். இனி யார் என்ன செய்தாலும் அது கிறீஸ் மனிதர்கள் மேலே சென்றடையப் போகின்றது. இவ்வளவு காலமும் பயத்துடன் செய்து வந்த தவறுகள் அனைத்தும் இனி துணிச்சலுடன் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள்..???

அந்த இடத்தில் கிறீஸ் பூதம் வந்தது மக்கள் அதை துரத்தினார்கள் அது இராணுவ முகாமுக்குள் சென்றது என்ற கதைகளை விடுத்து.. ஏதாவது தாக்குதல் இடம்பெற்றிருப்பின் அப்படியான தாக்குதல் இடம்பெற்ற இடங்களில் உள்ள அரசினர் அல்லது தனியார் மருத்துவமனைகளில் தாக்குதலிற்கு இலக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்தார்களா?? இல்லையா?? என 
உறுதிப்படுத்திய பின் உங்கள் தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மக்களுக்கு தெளிவாக உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

தொகுப்பு இ.சுகானன் சேர்க்கைகளுக்காக...

8 comments:

  1. கிரீஸ் மனிதன் விவகாரத்தில் நான் கொண்டிருந்த கருத்துக்கு சார்பாக ஒரு பதிவு..என்னுடைய 100% ஆதரவு
    ..
    இன்னமும் சில விடயங்களை சேர்த்து அலசலாம் சுகாணன்..
    ஒரு நாட்டு அரசாங்கத்திற்கு இப்படிப்பட்ட செய்ற்பாடுகளுக்கு துணைபோவதால் என்ன லாபம்...?
    இந்த செய்ற்பாடுகளால் யார் லாபம் செறுகிறார்கள்...?
    (கிரீஸ் மனிதர்களைத்தவிர ஒட்டுமொத்த மஹிந்த எதிர்ப்பு தமிழ் மக்களும் சோபையிழந்துபோயுள்ள ஐ.தே.க வினருமே)..
    இந்த கிரீஸ் மனிதனால் பாதிக்கப்படுவது யார்?
    அப்பாவி மக்கள்..
    ஏலவே அப்பாவி மக்களை கெடயமாக பயன் படுத்தி அதே அப்பாவி மக்க்களுக்காக குரல் கொடுத்த சமுகம் யார்???????
    இராணுவம் என்றால் அங்கே மனிதரல்லாதோர் எத்தனை பேர் இருக்கலாம்?
    இது போன்ர கேள்விகளையும் வைத்து அலசலாம்...நான் என்ன சொல்ல வாறன் எண்டது விளங்கியிருக்கும்....

    ReplyDelete
  2. machan politces eluthuvathu not hard(easy) because we are in the same place but piraichanaivarum endu than adakki vasikkiram ellarum

    ReplyDelete
  3. அமரேக்ஷ்...

    நீ சொன்னது விளங்குது..

    அர்ஜீன்...

    அரசியல் எழுதிறது சுலபம் தான்.. ஆனால் நாங்கள் அரசியல் வாதியும் இல்லை.. அவங்களாள அரசியல் லாபம் அடையப் போறதும் இல்லை.
    சில விடயங்கள் கதைக்க எமக்கு உரிமை இருக்கு. இது யாரையும் புண்படுத்திற நோக்கத்தில பதியப்பட்ட பதிவு இல்லை.

    கண்டதையும் எழுதிற பத்திரிகைகாற நண்பர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள். ஊடகவியலாளர் நினைச்சா புள்ளிவிபரத்தோட அப்படியான நிகழ்வுகள் உண்மையா?/ பொய்யா?/ என்று போடலாம்.

    யாழ்ப்பாணத்தில எத்தின பிள்ளையள் கற்பமாகுது எத்தின பிள்ளையள் கருத்தடை செய்யுது எண்டு கண்க்கு வெளியிடத் தெரியும். இது செய்யத் தெரியாதோ???

    சில இணையத்தளங்கள் யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீரழிவு எண்டு சொல்லி பஸ்ல.. பீச்சில... பூங்காக்களில ஒழிஞ்சிருந்து படமெடுத்து தன்ர தாய் பூமியை கேவலப்படுத்திற ஆட்களால ஏன் இதுகளை மட்டும் வெளிச்சத்துக்கு கொண்டுவர முடியாமல் இருக்கு??? இதும் எமது கலாச்சாரத்தில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் தானே!!!

    இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன..

    ReplyDelete
  4. machan uoodakam endathukku ok but uoodakaviyal enpathu unmaiya pasanum ok
    but yar intha uoodakaviyalaalar'a parpathu nan illa enda en ammaku pillai illa ithu than unmai
    1vote kurainthu poitu endu politician kavalai pada porana ??
    machan nanga illa enda intha ulakathila 1'm nadakkathu endu ninaithal athu muddal thanam

    for example poonkodi entra girl die but all r tell she is fool
    like as all incident

    ReplyDelete
  5. யாழ் அர்ஜுன்..மன்னிக்கணும் மச்சான்..ஆனா நான் இத இந்த இடத்தில எண்டாலும் சொல்லித்தான் ஆகணும்..முடிஞ்சா திருத்திக்கொள்ளு..உன்ர சுதந்திரத்த நான் இழக்க சொல்லி கேக்கலை..ஆனா கொஞ்சம் கருத்து காத்திரமா சிந்திக்க பழகு..நீ இதில போட்ட முதலாவது கொமென்றுக்கும் மேல இருக்கிற பதிவுக்கும் என்ன சம்பந்தம்>??????சுகாணன் பதிவில கேட்டது ஊடக வியலாளர் மற்றும் ஊடகங்கள் இதில தெளிவான நிலைப்ப்பாட்டை வெளிக்கொணரணும் எண்டது..அதுக்கு நீ எதுக்கு போய் நாங்க ஒரே இடத்தில இருக்கிறனாங்க எங்களுக்கு பயம் எண்டு புலம்பிறாய்...நீ ஒரு ஊடகவியலாளனாயிருந்தால் உனக்கு எழுத பயம் இருக்க கூடாது..தின்ன தெரியாதவனுக்கு எதுக்குடா பண்ணு..உனக்கு எழுத பயம் எண்டா நீ ஊடகவியளாளனா இருக்காத.இல்லை நீ சுகாணன் மதிரி சுதந்திரமா கருத்து சொல்லுறவன் பதிவாளன் எண்டா பதிவை எழுது..பயம் எண்டா எழுதாத.,எவனோ துணிவா எழுதிறவனுக்கு வந்து நீ ஏன் எழுதேல்லை எண்டதுக்கு உன்ர பக்க நியாயத்தை ஏண்டா சொல்லுறாய்...?உன்மையை சொன்னா நாம ஒரு மனதிருப்திக்கு எழுதீற்று போறம்..மற்றவன் எழுதின பொய்ய வாசிக்கிறத விட நாம எழுதிறதயாவது கிணற்று தவளை போல வாசித்து நல்வாழ்வு வாழுவம் எண்டுதான் எழுதிரம்..(கிணற்று தவளை எண்டா கேவலமா நினைக்கிறேல்லை...ஊரில இருக்கிற சாக்கடை தண்ணிகளில தவழ்றத விட நல்ல வீட்டு நல்ல கிணத்திலயே வாழ்றது எவ்வளவோ மேல்)..

    ReplyDelete
  6. மேலும்....ஒருத்தனால ஒண்டும் சாதிக்க முடியாது எண்டுறது நியாயம் தான்..ஆனா ஒருத்தனால கெடுத்திட முடியும் எண்டுறத நம்புவாய் தானே..அப்போ எதுக்கு நீங்க ஒருசிலர் ஒட்டுமொத்த ஊர் பெயரையே போட்டு அதில நியூஸ் எழுதி வாறீங்க.நீ கூட ஜப்பணா நியூஸ்/ன்யூஸ் ஜப்பணா எண்டு ஒண்டு வச்சிருக்கிராய்..அதில உன்னுடைய சில தனிப்பட்ட கருத்துக்களை எழுதியிருக்கிராய்..உன் கருத்துக்களை சொல்லு.தவறில்லை.அதற்காக போராடு தவறில்லை...ஆனா நீ சுயமாக நீயாக கருத்துக்களை வெளியிடு.ஏன் ஒரு ஊர் பெயரை வைத்து இப்பிடி கருத்து வெளியிடுகிராய்...?மேலும் ஊர் பெயரை தன் பெயரிற்கு முன்னால் வைத்துக்கொள்ள மில்லியன் பேர் இருக்காங்க.,.நீ சொன்ன மாரி உன்ர அம்மாக்கு ஒரே குழந்தை நீ...உன்ர அப்பா அம்மாட பேரை தன் பேரிற்கு முன்னால் வைத்துக்கொள்ள நீ ஒருவன் தான் இருக்கிராய்.ஊர் பேரை வைத்து....?விளம்பர நோக்கம்..மச்சி..இதை நான் உனக்கு நேரில கண்டு கதைக்கேக்க சொல்லுவம் எண்டு இருந்தன்..மன்னிச்சுக்கோ..நான் இதை குற்றச்சாட்டாக சொல்லவில்...லை..என் அவதானம் ஒன்றுதான்..நீ என் சக மாணவன்..ஆந்த ரீதியில் புரிந்து கொள்வாய் என நம்புறன்..நாங்கள் நாங்களாய் இருப்பம்.....தப்புன்ன சொல்லணும் எண்டு தோணிச்சுன்னா நாமளா சொலுவம்...எனக்கு அறிவு தெரிஞ்ச காலத்தில இருந்து நான் ஆராதிச்சு வந்த கோயில் நல்லூர்..இண்டைக்கு இறைவன் மதம் பற்றிய மாற்று கருத்துக்கள் என்னுள் முளைத்த பின்னும் ஆராதிக்கும் கோயில் நல்லூர்.அதில் ஒழுங்கு கட்டுப்பாட்டைகாக்க அறங்க்காவலர்களால் நியமிக்கப்பட்டு...வாழையடி வாழையாக பரம்பரை பரம்பரையாக சரியை தொண்டாக கடமை செய்து வரும் தறுமுவின் சொந்த செய்ற்பாட்டை பற்றி விமர்சித்திருந்தால் பரவாயில்லை..ஆனால் அவரின் தொண்டைப்பற்றி எதுவும் அறிந்திருக்க வாய்பில்லாத நீ...யாழ்பானத்திண்ட பெயரை வைத்து கேவலமாக விமர்சித்தது என்னை விசனமடைய வைத்தது...நீ சொல்லு..உன்ர அப்பாட பேரை போட்டு அர்ஜுண் சொல்லு..எதுக்கு யாழ்ப்பாணத்த இழுக்கிராய்...?நானும் யாழ்பானத்தான் தான்..நான் இதுக்கு உடன்பாடில்லை..எப்படி நீ எனது விலாசத்தை பயன்படுத்தி அப்படியான கருத்து வெளியிடுவாய்..யார் உனக்கு அந்த உரிமை தந்தது...?அந்த வீட்டு சதந்திரம் அது..இதை நீ ஏதாவது பதிவு செய்யப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடகத்தில் எழுத முடியுமா?இல்லை..ஆக ஊடகத்தில் இருக்கும் கொஞ்ச நெஞ்ச கட்டுப்பாட்டையும் மீறி உங்களது தனிப்பட்ட கருத்துக்களை விளம்பரம் செய்யவே நீங்கள் இப்பிடி ஊர் பெயரில் கொள்ளை அடிக்கிறீர்கள்....

    ReplyDelete
  7. யாழ் அர்ஜுன்..மன்னிக்கணும் மச்சான்..ஆனா நான் இத இந்த இடத்தில எண்டாலும் சொல்லித்தான் ஆகணும்..முடிஞ்சா திருத்திக்கொள்ளு..உன்ர சுதந்திரத்த நான் இழக்க சொல்லி கேக்கலை..ஆனா கொஞ்சம் கருத்து காத்திரமா சிந்திக்க பழகு..நீ இதில போட்ட முதலாவது கொமென்றுக்கும் மேல இருக்கிற பதிவுக்கும் என்ன சம்பந்தம்>
    1st as a frind i tell some thing 2 suganan

    now i tell2u
    nan solla vanthathu intha naddila now "krish pootham/man" enda vidayam thadai saiya paddu ullathu ne kadpai yar sonnathu endu nan 1 accident'a man(police) oda kathaikkum pothu intha kathai public la kathithal 4year jail(when aavasarakala saddam)
    so all meadia mownam kathathu illa endu sollu pappam(then named as marma manithan)
    do u know???
    ok suganan ta vidayathukku varan uoodakaviyalalan enpavan pirakkala uruvakka paddavan 1st mind it(ne & nan like as all)
    .நீ ஒரு ஊடகவியலாளனாயிருந்தால் உனக்கு எழுத பயம் இருக்க கூடாது.
    ok
    i accept
    but i ask kuganathan & nimalarayan.....etc nadanthathu ena...?

    dai enkada school time la neum irunthai nanum irunthan but enkalai usuppu athianvan ellam enka .....?
    1st yosi
    ellam valinaddila
    epa ena solluranga(enka amma pavam appa pavam kasta padukutham)
    enada unta site la varan ne jaffna hindu jaffna hindu sollurai
    ok
    nan unai kadkiran
    -----plz dont angry with me------
    evan sollala amarash school par'a vaichu aalaiuran endu
    unadda avanga solli irukka maddanga enadda sonnanga but nan yar endu solla varala enakku ne athavathu jhc patti post poddai enda kaddayam (personal'a from some body )message varum evan ean epidi saiuran endu school manatha thatuvila poddu vikkiran endu (1man tell evan kodumai thanka mudiyamal remove pannitan endu)
    kovikkatha enai soodathi poddai
    ne enakku frind ok ne advice pannu i accept appathan nan thirunthalam

    ஒருவன் தான் இருக்கிராய்.ஊர் பேரை வைத்து....?விளம்பர நோக்கம்..மச்சி..இதை நான் உனக்கு நேரில கண்டு கதைக்கேக்க சொல்லுவம் எண்டு இருந்தன்..

    dai nanga pirantha poomida maranthu poicha unakku ena epidi sollurai
    dai nan uooraivaithu bussiness panna varala
    jaffnala nadakkirathu 1'm unakku thatiyatha....??
    neum eluthu
    nan vandam endu sollala ok
    nan thappaka pavikkala endu enda manan solluthu

    ReplyDelete
  8. .எனக்கு அறிவு தெரிஞ்ச காலத்தில இருந்து நான் ஆராதிச்சு வந்த கோயில் நல்லூர்..இண்டைக்கு இறைவன் மதம் பற்றிய மாற்று கருத்துக்கள் என்னுள் முளைத்த பின்னும் ஆராதிக்கும் கோயில் நல்லூர்.அதில் ஒழுங்கு கட்டுப்பாட்டைகாக்க அறங்க்காவலர்களால் நியமிக்கப்பட்டு...வாழையடி வாழையாக பரம்பரை பரம்பரையாக சரியை தொண்டாக கடமை செய்து வரும் தறுமுவின் சொந்த செய்ற்பாட்டை பற்றி விமர்சித்திருந்தால் பரவாயில்லை..ஆனால் அவரின் தொண்டைப்பற்றி எதுவும் அறிந்திருக்க வாய்பில்லாத நீ...யாழ்பானத்திண்ட பெயரை வைத்து கேவலமாக விமர்சித்தது என்னை விசனமடைய வைத்தது...நீ சொல்லு.

    machan i want tell newjaffna kum enakkun entha thodarpu illa

    ne last la podda vidayam "nallur " enakku thavai aatha kathai open'a nan solluran

    my site mari yosithudatha plz understand

    new jaffna vanthu punanikadduvan padiyan now in france he do that
    enakku avantha karuthila udanpadu illa

    nan vanukku ethiraka than
    sayal paddanan suganan oda sarnthu
    1st mind it
    follow this link]

    சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே......!
    http://ejaffna.blogspot.com/2011/06/blog-post_4651.html


    my site
    http://ejaffna.blogspot.com/

    ReplyDelete