Saturday, July 24, 2021
இதில் யார் பணக்காரன்
ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..!
சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..!
இதில் யார்_பணக்காரர்...?!!
3 'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீ்ட்டு 6 மாத குழந்தையின் அம்மா,
ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார்,
அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தணியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்..!
ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,
டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...!!..
பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......!!!
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....!
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.
சுயநலம் என்பது கால்பந்து போன்றது.
இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.
ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.
மற்றொன்று உதைக்கப் படுகின்றது.
தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.
ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.
சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.
- படித்ததில் பிடித்தது -
Tuesday, July 20, 2021
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
சந்தைக்கடையில் இரண்டு பையன்கள் மீன் விற்றுக் கொண்டிருந்தனர். வியாபாரம் மிகவும் மந்தமாகத் தான் இருந்தது.*
படித்ததில் பிடித்தது
Friday, July 16, 2021
அறிவுக்கும் கல்விக்கும் சம்மந்தம் இல்லை
ஒரு ஊரில் சமையல்காரர் ஒருவர் வசித்து வந்தார் பெயர், ராமு. அவர் சமையல் எந்த அளவுக்குச் சுவையானதோ அந்த அளவிற்கு இனிமையானவர். அந்த ஊரில் அவரை அனைவருக்கும் பிடிக்கும் அத்தகைய பண்பாளன். ராமு சிறு வயது முதலே பல கஷ்டங்களை எதிர்கொண்டான்.
சிறு வயதிலே தன் பெற்றோர்களை ஒரு விபத்தில் இழந்துவிட்டான். நன்றாகப் படிக்கும் மாணவன் எனினும் அன்றாட தேவைக்குக் கூடப் பணம் இல்லாததால், பள்ளி படிப்பைப் பாதியிலே கைவிட்டான். தனக்கு தெரிந்த சமையலை தொழிலாக மாற்றிக் கொண்டான். தற்போது 50 வருடங்களாகக் கோவில் மற்றும் வீட்டு விசேஷங்களுக்குச் சமைத்து பரிமாறி வருகிறான்.
அவருக்கு ஒரு பெண் குழந்தை, அமுதா வயது 20. தனக்கு பண கஷ்டம் அவ்வப்போது இருந்தாலும், அதை என்றும் தன் மகளிடம் காட்டிக் கொண்டதில்லை. எந்தக் காரணத்தால் அவன் கல்வி தடை பட்டதோ அதே போன்ற பாதிப்பு தன் மகளுக்கு வரக் கூடாது என ஊரிலே சிறந்த பள்ளியில் படிக்க வைத்தான்.
அமுதாவின் புலம்பல்
அமுதா மிகவும் நன்றாகப் படிப்பாள், வகுப்பில் என்றுமே முதல் மதிபெண் பெற்று தேர்ச்சி அடைவாள். அப்பாமீது அதிக அன்பு கொண்டவள் ஆனால் அவரைவிட அதிகம் படித்தவள் எனக் கொஞ்சம் ஆணவமும் கொண்டிருந்தாள்.
’எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம். இந்தச் சின்ன வயதில் எனக்கு இவ்வளவு கடினமான சூழ்நிலையா’ என அமுதா அடிக்கடி புலம்பிக் கொண்டே இருந்தாள். அவற்றை ராமு கவனித்துக் கொண்டே வந்தான்.
‘ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொரு பிரச்சனை வந்துவிடுகிறது. இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்ன வாழ்க்கை இது?’ என நாளுக்கு நாள் அவள் புலம்பல் இன்னும் அதிகரித்து கொண்டிருந்தது.
ஒரு நாள் ராமு அமுதாவை அழைத்து, ‘ஏன் அம்மா இப்படி புலம்பிக் கொண்டே இருக்கிறாய்? கஷ்டங்கள் அனைவருக்கும் பொதுவானது தான். வாழ்க்கை என்றால் கஷ்டங்கள் இருக்கதான் செய்யும். இதற்காக வாழ்கையை வெறுக்கக் கூடாது’ எனப் புரிய வைக்க முயன்றான்.
‘இல்லை அப்பா, உங்களுக்கு ஒன்னும் தெரியாது. இந்தக் காலத்துல எங்களுக்கு 1008 பிரச்சனை இருக்கு. அதெலாம் சொன்ன உங்களுக்குப் புரியாது. நீங்க இன்னும் உங்க காலத்துலையே இருக்கீங்க’ என்றாள் அமுதா.
‘காலம் என்னம்மா காலம், கஷ்டங்கள் என்றும் ஒன்று தான். சொல்லப் போனால் அன்று எனக்குக் கிடைக்காத பல இன்பங்களும் வாய்ப்புகளும் இன்று உங்களுக்கு மிகவும் எளிமையாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாம் என்றும் வாழ்வின் இன்பங்களை எண்ணி பார்க்க வேண்டும் துன்பங்களை அல்ல’ என்று மீண்டும் புத்தி மதி கூற முயற்சித்தான்.
‘அப்பா சமையல் போல எல்லாம் எளிதுன்னு நினைக்காதீங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது’ எனக் கூறினாள் அமுதா. அவள் கொண்ட ஆணவம் ராமு கூறும் உண்மைக்குச் செவி சாய்க்க விடாமல் அவளைத் தடுத்தது.
மூன்று பொருட்கள்
ராமுவிற்கு புரிந்து விட்டது, இனி அமுதாவிடம் பேசிப் பயன் இல்லை என்று. ‘சரி அம்மா. எனக்குப் புரியவில்லை தான். என்னுடன் சமையல் அறைக்கு வா’ என அமுதாவை அழைத்துச் சென்றான் ராமு.
அடுப்பில் மூன்று பாத்திரங்களை வைத்தான். அதில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்தான். ‘என்ன அப்பா செய்றீங்க? எதற்கு என்ன கூட்டிட்டு வந்தீங்க? படிக்க நிறைய இருக்கு நான் போகணும்’ எனப் பொறுமையின்றி தவித்தாள்.
‘சிறிது நேரம் பொறு அமுதா’ என அவளை நிதானப் படுத்தினான் ராமு. ஒரு உருளைக்கிழங்கு ஒரு முட்டை மற்றும் சிறிது காபி கொட்டைகளை எடுத்து வந்தான். ‘அமுதா இந்த மூன்றையும் ஒரு ஒரு பாத்திரத்தில் போடு’ என மூன்று பொருட்களையும் அமுதாவின் கையிலே கொடுத்தான். கொத்திக்கும் நீரில் மூன்று பொருட்களையும் போட்டபின், அடுப்பின் தீயை இன்னும் அதிக படுத்தினான் ராமு. சிறிது நேரம் கழித்து மூன்று பாத்திரங்களையும் எடுத்து உள்ளே போட்ட பொருட்களைத் தட்டில் வைத்தான்.
‘அமுதா, இதோ இந்த உருளை கிழங்கு இப்பொழுது எப்படி உள்ளது’ என ராமு கேட்க, ‘மென்மையாகி விட்டது அப்பா’ என்றாள் அமுதா.
‘இந்த முட்டை?’
‘கீழே போட்டால் உடையும் முட்டை, இனி உடையாதது போல அதன் புற பகுதி வலு பெற்று உள்ளது அப்பா.’
‘சரி அமுதா அந்தக் காபியை ஊற்று’
இருவரும் காபியை ஊற்றிக் குடித்தனர். காபியின் சுவை அமுதாவிற்கு இன்பம் அளித்தது.
‘இது எப்படி உள்ளது?’ கேட்டான் ராமு.
‘மிகவும் அருமை அப்பா’ அமுதா சிரித்துக் கொண்டே கூறினாள்.
‘இது தான் வாழ்க்கை அமுதா. வாழ்கையின் துன்பங்கள் வெந்நீரை போலச் சுடும். நாம் கடுமையாக அந்த உருளைக் கிழங்கைப் போல இருந்தால் மென்மையாகி விடுவோம். மென்மையான முட்டையைப் போல இருந்தால் கடுமையாகி விடுவோம். ஆனால், அந்தக் காபி கோட்டைகள்போல வெந்நீரோடு கலந்து அவற்றை ஏற்றுக் கொண்டால், வாழ்க்கையே சுவையாகி விடும். நீ எதைத் தேர்ந்தெடுக்க போகிறாய்?’ என்றான் ராமு.
‘காபி கோட்டைகள். அதுவே வாழ்கையை மகிழ்ச்சியாக வாழுவதற்கு வழி, உணர்ந்துக் கொண்டேன்.
உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதற்கு மன்னித்து விடுங்கள் அப்பா. அறிவுக்கும் கல்விக்கும் சம்மந்தம் இல்லை. நீங்கள் தான் சிறந்த அப்பா!’ எனத் தன் தவறை உணர்ந்து வாழ்வின் உண்மையான ரகசியத்தை மனதால் ஏற்றுக் கொண்டாள் அமுதா.
படித்ததில் பிடித்தது
Sunday, July 4, 2021
யூதர்களின் வரலாறு-01
1972 இல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக்சில் 11 இஸ்ரேல் விளையாட்டு வீரர்களும் அவர்களின் பயிற்றுனர்களும் பாலஸ்தீன "கருப்பு செப்டெம்பர்" குழுவால் கொல்லப்பட்டதும், அதன் பின்பு இடி அமீன் காலத்தில் 1979 இல் நடந்த ஒப்பரேஷன் எண்டபே யும் நான் சிறுவனாக இருந்த காலத்தில் நடந்தன. அது பற்றிய செய்திகளும் திரைப்படங்களும் எனக்கு இஸ்ரேல் பற்றி அறியும் ஆவலை தூண்டியது.
எனது அம்மாவிடம் இருந்த டைம்ஸ் அட்லஸ் என்னும் உலக வரைபடங்ககள் உள்ள புத்தகத்தை புரட்டிப்பார்த்தால் அதில் இஸ்ரேல் என்றொரு நாடே இருக்கவில்லை! ஆம் எனது அம்மா படித்தபோது இஸ்ரேல் என்றொரு நாடே இருக்கவில்லை!
சில வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல் நாட்டுக்கு சென்று வந்ததில் இருந்து யூதர்களைப்பற்றியும், இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம் அதன் வளர்ச்சி பற்றியும் ஒரு தொடர் எழுதலாம் என்று நினைத்தாலும் நேரம் ஒதுக்குவது கடினமாக உள்ளது.
யூதர்களைப்பற்றி எழுதவேண்டும் என்றால் கி மு 2000 ஆண்டளவில் ஆபிரகாமின் தோற்றத்தில் இருந்து ஆரம்பித்து கிறிஸ்துவின் இறப்பின் பின்பான, நாடோடிகளாக அலைந்து திரிந்த, 2000 ஆண்டுகளைப்பற்றி எழுதவேண்டும். 1948இல் இஸ்ரேல் தோற்றம் பெற்றாலும் அதற்கான ஆயத்தங்களை 19ம் நூற்றாண்டில் ஆரம்பித்து alliah என்ற ஜெருசலேமுக்கு போய் குடியேறும் முறையுடன் ஆரம்பித்திருந்தார்கள். அதன் பின்பு 1964 இல் PLO ஆரம்பிக்கப்பட்டதும், 1967இல் நடந்த 6 நாள் போரும் முக்கியமானவை.
இன்று 50% ஆன உலக யூதர்கள் இஸ்ரேலுக்கு சென்று குடியேறிவிட்டார்கள். ஒரு கோடி சனத்தொகை உள்ள இஸ்ரேலில் 75% யூதர்களும் 20% முஸ்லிம்களும் 2% கிறிஸ்தவர்களும் வாழுகின்றனர். வரப்போகும் எனது தொடரை வாசிக்க பொறுமையில்லாதவர்கள் கீழுள்ள வீடியோவை பாருங்கள்.
Kumaravelu Ganesan
20.05.2021
Sunday, July 26, 2020
Saturday, July 25, 2020
எதற்காக எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்?
சிந்தியுங்கள்... செயலாற்றுங்கள்.... அதிகம் படித்த திமிரில் மூடர்கள் போல் செயற்படாதீர்கள்.....
அதிகம் பகிருங்கள்!!!
அறிவுள்ளவர்கள் சிந்திக்கட்டும்.!!!
கானொளிகள் தனித்தொகுப்பாக விரைவில்...
Friday, July 24, 2020
தனிமைப்படுத்தலும் நோய்தடுப்பும் தொடர்பான சட்டவிதிகள் - 03
இச்சட்டத்தை நிருவகித்தல் அல்லது அமுலாக்கம் தொடர்பில் நோக்குமிடத்து 03 விடயங்கள் அல்லது 03 படிநிலைகள் காணப்படுகிறது.
1. தகுதிவாய்ந்த அதிகாரி (Proper Authority)
2. அதிகாரக் கையளிப்பு (Delegation of Powers)
3. பரிசோதகர்களை நியமித்தல் (Appointment of Inspectors)
#தகுதிவாய்ந்த #அதிகாரிகள் தொடர்பில்
7481 இலக்க 28.08.1925 திகதிய மற்றும்
9134 இலக்க 11.06.1943 திகதிய அரச வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட தானியங்களைக் களஞ்சியப்படுத்தலும் புழுவியாதியைத் தடுத்தலுக்குமான தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் (Quarantine Regulations related to Storage of Grains and Ancylostomiasis) 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 02 மற்றும் பிரிவு 03 இன் நோக்கெல்லையை விரிவுபடுத்தியுள்ளது. அதாவது தகுதிவாய்ந்த அதிகாரிகள் எனும் விடயம் தொடர்பான பொருட்கோடல் இவ் ஒழுங்குவிதிகளில் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம்
(1) தீவு முழுவதற்குமான தகுதிவாய்ந்த அதிகாரியாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும்,
(2) உள்ளூர் இடப்பகுதிகளுக்கான தகுதி வாய்ந்த அதிகாரிகளாக அந்தந்த மாநகர சபை, நகர சபை அல்லது பட்டின/கிராம சபைகளின் (தற்போது பிரதேச சபைகள்) தவிசாளர்கள் அல்லது அந்த இடப்பரப்புகளுக்கான சுகாதார வைத்திய அதிகாரிகள்,
(3) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையம் தொடர்பில் Director of Qurantine அல்லது துறைமுக சுகாதார அதிகாரி (Port Health Officer),
(4) இராணுவம், கடற்படை மற்றும் வான்படை ஆகிய படைத்துறைகளின் விடயத்தில் அந்தந்த படைப்பிரிவின் வைத்தியர்கள் (Medical Officer),
(5) மேற்படி விடயப்பரப்பினுள் அடங்காத ஏனைய விடயங்கள் தொடர்பில் அந்தந்த பிரிவுக்குப் பொறுபான சுகாதார சேவைகள் அத்தியட்சகர்கள் (தற்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - RDHS) இடப்பரப்புக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்படலாம்.
இதனடிப்படையில் காலத்துக்குக் காலம் பல ஒழுங்குவிதிகள் ஆக்கப்பட்டுவந்துள்ளது. அதில் பெரும்பாலான ஒழுங்குவிதிகளில் இடப்பரப்பிற்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளாக உள்ளூராட்சி சபையின் தவிசாளர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
புழுவியாதி தெடர்பான ஒழுங்குவிதியில் உள்ளூராட்சி சபையின் தவிசாளர்களும், அந்த இடப்பரப்புக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளும் இடப்பரப்புக்குரிய தகுதி வாய்ந்த அதிகாரிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
#அதிகாரக் #கையளிப்பு தொடர்பில் நோக்குமிடத்து 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 11 பிரகாரம் அமைச்சர் இச்சட்டத்தின் அல்லது ஒழுங்கு விதிகளின் அமுல்ப்படுத்துகை தொடர்பில் தனது அதிகாரங்களை உள்ளூர் அதிகார சபைகளுக்குக் கையளிக்கலாம்.
அத்துடன் 10713 இலக்க 17.09.1954 இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கமைய பிரிவு 37 பிரகாரம் தகுதி வாய்ந்த அதிகாரியானவர் எழுத்துமூலமாக தனது அதிகாரத்தை கையளிப்பு செய்ய முடியும். இதன் மூலமாக இடப்பரப்புகளுக்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளை ஏற்பாடுசெய்து கொள்ளலாம்.
#பரிசோதகர்களை #நியமித்தல் தொடர்பில்
1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் 3(1)(r) பிரிவில் இச்சட்டதிலும், இதன்கீழ் ஆக்கப்படும் ஒழுங்குவிதிகளிலும் ஏற்பாடு செய்யப்படும் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தும் நோக்கத்திற்காக பரிசோதகர்களை நியமித்தலுக்கும், அவர்கள் தமது கடமையை ஆற்றுவதற்கு அவசியமான அதிகாரங்களை வழங்குவதற்குமான ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்காக அமைச்சர் அதே சட்டத்தின் பிரிவு 2 இன்கீழ் தனது ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்கான தத்துவத்தைப் பிரயோகிக்க முடியும்.
அத்துடன் 9134 இலக்க 11.06.1943 திகதிய வர்த்தமானியிலும் 6365 இலக்க 22.04.1938 திகதிய வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்ட பொது ஒழுங்குவிதிகள் எனும் தலைப்பின் கீழான பிரிவு 38 "பரிசோதகர் (Inspector)" என்பதற்கான வரைவிலக்கணத்தைக் குறிப்பிடுகிறது. அதன்படி பரிசோதகர் என்பது சுகாதார சேவைகள் திணைக்களத்தின் "சுகாதார உதவியாளர்கள் (Sanitary Assistants) அல்லது மாநகர சபைகள்/ நகர சபைகளின் சுகாதாரப் பிரிவுக்குப் பொறுப்பான ஏவரேனும் பரிசோதகர் அல்லது உப பரிசோதகரை அல்லது Director of Quarantine Department இனால் நியமிக்கப்பட்ட எவரேனும் பரிசோதகரை குறிப்பதாக அர்த்தம் கொள்ளவேண்டும். Sanitary Assistant என்பது பின்னர் Sanitary Inspector/ Sanitary Board Inspector எனவும் தற்போது Public Health Inspector(PHI) எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதே ஒழுங்குவிதிகளின் பிரிவு 39 பிரகாரம் தகுதி வாய்ந்த அதிகாரி தனது தற்துணிபின் அடிப்படையில் இச்சட்டத்தின் பணிகளை ஆற்றுவதற்கான பரிசோதகர்களை நியமனம் செய்யவும், இரத்துச் செய்யவும் முடியும்.
இங்கு பரிசோதகர்கள் நியமிக்கப்படாவிடின் அல்லது பரிசோதகர்களுக்கான அதிகாரம் வழங்கப்படாவிடின் சட்டம் அல்லது ஒழுங்குவிதிகளின் அமுலாக்கல் முழுமை பெறாது.
அத்துடன் 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்படும் ஒழுங்குவிதிகள் அனைத்தும் அதன் பிரிவு 12 இன் பிரகாரம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படல் வேண்டும். அத்தகைய வர்தமானி பிரசுரிக்கப்பட்ட திகதியிலிருந்து அது சட்ட வலுக்கொள்ளும் எனவும் 12ம் பிரிவு குறிப்பிடுகிறது.
Kajenthiran Sathithasan
------ தொடர்ச்சி விரைவில் -----
Subscribe to:
Posts (Atom)



















