Thursday, July 9, 2020

மு. மேத்தாவின் கவிதைகளில் இருந்து.....

💗💗💗காதலர் பாதை💗💗💗

💖
கல்யாண மேடையை 
அலங்கரிப்பதற்காகக் 
கனவு கண்ட 
கன்னிப் பூக்கள்
சவப்பெட்டியின் மேனியில்
சரிந்து விழுந்தன !
💖

💞💞💞என் முதற் காதல்💞💞💞

😍
முகவரி
சரியாக எழுதப்படாத
ஒரு கடிதம்
முட்டி மோதி அலைந்து விட்டு
என்னிடமே திரும்பிவிட்டது!
😍

😌😌😌அரலிப்பூ அழுகிறது😟😟😟

💀
பூக்களே நானுமொரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்

பூவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே!

பொன் விரல்கள் தீண்டலையே - நான்
பூமாலை யாகலையே!
💀



No comments:

Post a Comment