Thursday, June 30, 2011

இது காதல் ஒரு புது கவிதை .................(பாகம் 2)

நாட்களின் இடைவேளை
அதிகமாகி
மனசின் இடைவெளி குறுகிப்போன ஒரு
குளிர் மாலைப் பொழுதில்

தொலை பேசி அலையில் அவன் மனம் திறந்தான்.


உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது சுடர்.
விளக்க முடியவில்லை
ஆனால்


தவறான பேருந்தில்
தவறாமல் ஏறுகிறேன்.


புத்தகத்தைத் திறந்து வைத்து
உன்னைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

குளியலறையில் சோப்பு தேவையென்பதை
குறித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது
குறித்துவைத்துப் பார்த்தேன் ஆனால்
குளிக்கவே மறந்துவிட்டேன்.


விளங்கியது போல இருக்கிறது
ஆனால் விளக்க முடியவில்லை.


நான்
காதல் என்னும் வட்டத்துக்குள்
உன்னைச் சுற்றத்துவங்கிவிட்டேன்
சுடர் .


மனசு தந்தியடிக்க.
வார்த்தைகள்
காந்தத்தின் எதிர்துருவங்களை
வலுக்கட்டாயமாய் இணைக்கும் போது
விலகுவது போல விலக.

சிதறல்களின் கோர்வையாய் சொல்லி
வியர்வையாய் ஒரு முனை நின்றான்.

                                                           பார்த்தியின் பதிவு தொடரும்.....

No comments:

Post a Comment