Wednesday, June 29, 2011

இரண்டுமனம் வேண்டும்...


பார்ப்பதற்கு “ஒரு மனம்” இருந்தால்
பார்த்துவிடலாம்......
அவளை 
மணப்பதற்கு “ஒரு மனம்” இருந்தால்
மணந்துவிடலாம்......
ஆனால்
இருப்பதோ “ஒரு மனம்”
  நான்
என் செய்வேன்.............

இரண்டு மனம் வேண்டும்..
இறைவனிடம் கேட்டேன்..
அவளுக்காக ஒன்று...
இவளுக்காக ஒன்று...
இரண்டு மனம் வேண்டும்........

வரவும் செலவும் இரண்டானால்...
வந்ததும் போவதும் இரண்டானால்...
புரிதலும் பகிர்தலும் இரண்டானால்...
இருதயம் ஒன்று போதாதே...
இரண்டு மனம் வேண்டும்...

விழிகளின் தண்டனை காட்சிவழி...
காட்சியின் தண்டனை நினைப்புவழி....
 நினைப்பதன் தண்டனை அடைதல்வழி...
அடைந்ததன் பிறகோ என்னவழி...????
இரண்டு மனம் வேண்டும்.....
                                                      -சுகானன்.
இதன் உண்மையான வடிவம்......


குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம் – அவளை
மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலம் – ஆனால்
இருப்பதோ ஒரு மனம்…நான் என்ன செய்வேன்?
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று (2)
(இரண்டு)
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால் (2)
உறவும் பிரிவும் இரண்டானால் (2)
உள்ளம் ஒன்று போதாதே!
(இரண்டு)
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி (2)
காதலின் தண்டனை கடவுள் வழி (2)
கடவுளைத் தண்டிக்க என்ன வழி?
(இரண்டு)
பாடல்: இரண்டு மனம் வேண்டும்
பாடகர்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம் எஸ் விஸ்வநாதன்

திரைப்படம்: வசந்த மாளிகை

No comments:

Post a Comment