Monday, June 27, 2011

இனிவரும் காலத்தில் என் தாய் பூமி என்ன ஆகுமோ..????


அம்மா :- சைலேஷ்!! என்ன செய்றாய் ? வெளிக்கிடன்...நேரம் ஆகுது...

மகன் :- பொறுங்கம்மா ...மாற சீன் ஒண்டு...என்ர Facebook ல வெள்ளைக்காரி போல Friend Request பண்ணி இருக்கு...( பிஞ்சில பழுக்க ஆசைபடுது போல...) 

மகள் :- ஐயோ ! இல்லையடா தம்பி ,உது என்ர Friend (கடவுளே !இப்படியும் சந்தேகம் வர தொடங்கிட்டா) 

மகள் :- அம்மா ! நான் எந்த Dress போடுற...தோய்ச்சுப் போட்ட அந்த Black Denim இன்னும் வடிவா காயல்ல.....

அம்மா :- ஏன் ? அந்த White Denim ஐ போடன்...இந்த Black T Shirt கு நல்லா இருக்கும் (அது அம்மாவா இல்ல......??)

அப்பா :- என்ன தாயும் மகளும் ஒரே மாதிரி Dress , ஒரே மாதிரி Hair Style..பின்னால பாக்க வித்தியாசமே தெரியல...(கவனம் அய்யா!!! உமக்கே வித்தியாசம் தெரியாட்டி...)
அம்மா :- போங்க நீங்க வேற ...நீங்க தானே சொன்னிங்க Straight பண்ணிணா நல்ல இருக்கும் எண்டு...(முடிய சொல்றாங்க போல....)
அப்பா :- நான் எங்கை சொன்னான்...நீதானே திரேசியாக்கு நல்லா இருக்கு நானும் செய்யட்டா எண்டு கேட்டாய்... பிறகு....

மகன் :- சரி சரி... அம்மாக்கும் அக்காக்கும் வடிவாதான் இருக்கு ...சரி போவம் நாங்க...

அப்பா :- ம்...சரி ...எல்லாரும் உங்க Phone , IC எல்லாம் எடுத்தாசா ? (அட இந்த IC கொண்டு போறத இன்னும் விடல்லயா)

அவ்வாறே பேசிக்கொண்டு  பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடக்கின்றனர்.

அம்மா :- என்ன திரேசியா Phone ஐ அமத்திக் கொண்டே வாராய் ..???

மகன் :- ஓம் அம்மா இவ எப்பவும் Phone தான் (பொறு தம்பி பொறு...)

மகள் :- போடா பிசு ...இல்லை அம்மா நான் இண்டைக்கு Class வரமாட்டன் எண்டு Sir கு SMS போடுறன் அம்மா...

அப்பா :- நீங்க போங்க ...நான் Cargills ல போய் Bill கட்டிட்டு வாறான்.

மகன் :-அப்பா என்ர Phone கும் கட்டிவிடுங்கபா ...


அவ்வாறே பேசியபடி பஸ்ஸுக்காக காத்திருக்கின்றார்கள்.

மகன் :- அப்பா "யாப்பனய" எண்டு Board போட்டு பஸ் ஒண்டு வருது போல ஏறுவம்.

அம்மா:- ஓமப்பா நிண்டு பாக்கேலா ஏறுவம்.

அனைவரும் அந்த வண்டியில் ஏறுகின்றனர்.கடைசி ஆசனத்தில் திரேசியாவின் நண்பி தமிழரசி தன்னுடைய காதலன் அப்துல்லாவுடன் இருப்பதைக் திரேசியா காண்கின்றாள்.

மகள் :-அம்மா இதுதான் நான் சொன்னன் அந்த Girl தமிழரசி , அது அவட BoyFriend அப்துல்லா...( அவளுக்கு தாடிவைச்ச ஆம்பிளயல பிடிக்கும் போல...)

அம்மா:- எங்கை போறிங்க பிள்ளை ( கஷ்ரப்பட்டு கடைசி ஆசனம் பிடிச்சு வர நீங்க வேற ....முன்னுக்கு போங்க அம்மா)

தமிழரசி:- படம் பாக்க போறம் ( எங்க போனாலும் ஒண்டாத்தானா... )

மகள் :- நாங்கள் கசூரினா Beach கு போறம்

தமிழரசி:- நான் Night உனக்கு அடிச்சன் உன்ர Phone Waiting ல இருந்திச்சு.

மகள்:- மெல்லமா கதை அம்மா இருக்கா...நான் பிறகு சொல்றன்..


அவ்வாறே பஸ் செல்கின்றது.அப்பா நடத்துனரிடம் பஸ் Radio ஐ போடும் படி கேக்கின்றார். நடத்துனரும் Radio ஐ இயக்குகின்றார்.

அப்பா :- என்ன தம்பி ..ஐயோ இவங்க "முதல் தரம்" "முதல் தரம்" எண்டு சொல்லியே உயிரை எடுத்திடுவாங்க....

மகன் :- அந்த வெற்றில விடுங்க லோஷன் Uncle ர மகன் செய்யுற நிகழ்ச்சி இப்ப ....

நடத்துனர்:- இல்லை தம்பி ...அவங்க எனக்கு ஒரு DVD Player தந்திருக்காங்க..அந்த நன்றிக்கடன் வேண்டாமா..

அப்பா :- அப்ப நன்றிக்கடன் மட்டும் தானா இது ...ம்...


அவ்வாறே பஸ் போகும் போது வாகன நெரிசல் ஏற்படுகின்றது.மக்கள் கூட்டம் குவிந்து வேடிக்கை பாக்கின்றது

அப்பா :- என்ன நடந்தது ?

நடத்துனர் :- அது ஏதோ Accident...மாத்தறை ஆள் யாரோ செத்திட்டாங்களாம்.

பஸ் தொடர்ந்து செல்கிறது. நகரை அண்மிக்கும் போது மீண்டும் வாகன நெரிசல்...

நடத்துனர் :- அது அவங்கட பெரெரா போகுது அதான்...( புத்த பகவனே ! அரோகரா...)

இது இவ்வாறு இருக்க மகன் சத்தம் போடாம தன்னுடைய வேலையை பாத்துக்கொண்டிருந்தான், அவன் தீடீரெண்டு ஒரு பத்து ரூபாய் எடுத்து ஏதோ எழுதி யாருக்கும் தெரியாம இரண்டு பத்து ரூபாய் தாளை அருகில் இருந்த பெண்ணிடம் கொடுக்கின்றான். அவளும் அதற்கு பதிலாக ஒரு இருபது ரூபாய் எடுத்து எதோ எழுதிக் கொடுக்கின்றாள். ( அட விடுங்கப்பா... காசு மாத்தி இருக்காங்க போல)

யாழ் நகரை வந்தடைகின்றனர்.



மகன் :- அம்மா தண்ணி விடாய்குது. Kiri Packet ஒண்டு வாங்கி தாங்க....

அம்மா :- பொறு அந்த முஸ்லிம்  hotelல இருக்கும் குடிப்பம் ....
மகள் :- அப்பா அந்த English பட DVD வாங்கி போவமா ....???

அப்பா:- அங்க வாங்கி வைச்சிருக்கிற பாக்கவே நேரம் இல்லை...( நல்ல அப்பன்...)

மகன் :- அம்மா அங்கை , என்ர Class ல படிக்கிற கஷ்ரின் போறான்.

அம்மா :- பிறகு பாப்பம் ..வா ..நாங்க அடுத்த பஸ் எடுப்பம்.

அனைவரும் காரைநகர் பஸ் தரிப்பிடம் சென்று ஏறுகின்றார்கள். ஒரு மணித்தியால பயணத்தின் பின் காரைநகரை அடைந்து பிறகு நடந்து சென்று கசூர்னா கடற்கரையை அடைகின்றனர். விடுமுறையோ என்னவோ சனக்கூட்டம் நிறைந்து காணப்பட்டது

அம்மாவும் அப்பாவும் அமர்ந்தவாறே தம் பழைய காதல் நினைவுகளை மீட்டுகின்றனர். மகனும் மகளும் இயற்கையை ரசித்தவாறு நடக்கின்றனர்.



அப்பா:- என்னப்பா ! நாங்க அப்ப அந்த laneல தானே நிண்டு  கதைச்சம்.. இப்ப பாருங்க...

அம்மா:- ம்...அதுவும் எவளவு பயந்து பயந்து...

அப்பா:- (அப்பா, அம்மாவின் கூந்தலை தடவியபடியே ) கள்ளி உனக்கு எப்பவும் பயந்தான்...

அம்மா :- ( அம்மா, மகன் , மகள் எங்கே என கடைக்கண்களால் தேடியவாறே) என்னப்பா இதுகள் இரண்டும் எங்கயோ போட்டுதுகள் போல

அப்பா:- இப்ப ஏன் உனக்கு அதுகளை ...ஆறுதலாக வரட்டும்....

மகனும் மகளும் ஒரு புறம் கடலைப் பார்ப்பதும் கடைக்கண்களால் சூழலை நோக்குவதுமாக ......காதலர்கள் குடைக்கம்பிகளை எண்ணியபடியாக.......வியாபாரிகள் சிங்கள தமிழ் மொழிகளில் கத்திகொண்டே உலா வந்தனர்...தனியாக இருந்த திரேசியா ஐ அவதானித்த ஒரு வியாபாரி...

வியாபாரி:- தங்கச்சி வதுரு போத்தல் வேணுமா...ஏன் தனிய ஈக்கிறிங்க ...

திரேசியா:-(தன்னை சரி செய்தவாறே..)நான் தனிய இருந்தா உங்களிற்கு என்ன ?

வியாபாரி:- இல்லை தங்கச்சி என்ர போன் ல சல்லி இல்லை ... அவசரமாக ஒரு SMS போடணும் அதான்...

திரேசியா:- அதுக்கென்ன போட்டுட்டு தாங்க .. ( அதுதானே இதில என்ன இருக்கு.... )

இனி சொல்லவேண்டுமா அவன் திரேசியாவின் இலக்கத்தை எடுத்திட்டான். இனி என்ன இரவு ஆரம்பிக்க கூடும்.

பின்னுக்கு ஒட்டி இருந்த மணலை தட்டியவாறே அம்மாவும் அப்பாவும் மகனையும் மகளையும் தேடுகின்றனர்.

மகன் சத்தம் போடாம இருந்து Phone Camera ஐ Zoom பண்ணி பண்ணி ஏதொ எடுக்கின்றான் ( அட விடுங்கப்பா ....இயற்கையை ரசிச்சு படம் பிடிக்கிறான்)

மகள் போனையும் அமத்தியபடியே அக்கம் பக்கம் பார்வைகளை விட்டபடியே இருந்தாள் .அம்மா அப்பா மகன் மகள் மீண்டும் இணைகின்றனர்.

மகன்:- எங்கை அம்மா இவளவு நேரமும் இருந்திங்க...
அம்மா:- இல்லையடா ...அப்பாக்கு தலைக்கே ஒரே பேன் ஆக இருந்திச்சா அதான் பாத்திட்டு இருந்தன் ..

மகன் :-(மனசுக்குள் நினைக்கின்றான்) ஓகோ அப்படியா ....அப்ப இவளவு நேரமும் நான் படம் பிடிச்சது பேன் பாத்துக்கொண்டிருந்தவங்களைத்தானா...???
அப்பா :- சரி நேரம் ஆகுது போவம் வாங்க .

அம்மா :- போகேக்க கடைல சாப்பாடு எடுத்திட்டு போவம் ..இனி யாரு சமைக்கிற போய் (ம்...நல்ல முடிவு அம்மா)

அனைவரும் பஸ்ஸில் ஏறி யாழ் நகரை அடைந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வீடு செல்கின்றனர்...
வாங்கி வந்த சாப்பாட்டை அனைவரும் கூடி சாப்பிடுகின்றனர். ஒரு புது இலக்கதிலிருந்து திரேசியாவுக்கு Call அடிக்கின்றது.அவள் Cut பண்ணியவாறே சாப்பிட்டு முடிக்கின்றாள் . சாப்பிட்டு முடித்ததும் தம்பியும் அந்த இருபது ரூபாய் தாள் ஒன்றை எடுத்தவாறே படுக்க தன் அறைக்கு செல்கின்றான். திரேசியா புது இலக்கத்துக்கு "Who R U " எண்டு அனுப்பியவாறே படுக்க.... இல்லை இல்லை.... படுக்கை அறைக்கு செல்கின்றாள்.... அப்ப அம்மாவும் அப்பாவும் ????? ( ஐயோ வாயை மூடிட்டு வாசியுங்க ) .....அவங்க பாவம் Panadol ஐ போட்டவாறே படுக்க செல்கின்றனர்..

காலங்கள் ஓடினாலும் நவீனத்துவம் ஆகினாலும் மாற்றம் அடையக் கூடாத காரணிகள் சில உண்டு.. அதில் கலாச்சாரம் மிக முக்கியமானது.. நீ கெட்டால் பரவாயில்லை உன்னைப் பார்த்து மற்றவன் கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்..

 எவ்வளவு தான் நாகரிகம் அடைந்தாலும் அம்மா..!! என்ற உறவு அம்மா தானே....
இதை எவ்வாறு மாற்ற முடியாதோ தமிழ்னுக்கு என்ற ஓர் கலாச்சாரம் உண்டு. அதை கடைப்பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை..தயவு செய்து கெடுத்து விடாதீர்கள்..

மகன் , தந்தைக்கிடையேயான உரையாடல்...

அப்பா :- என்னடா யோசிக்கிறா...???

மகன் :- இப்ப உங்கள அப்பா என்று கூப்பிடிறன்.... நானும் உங்க அளவு வளர்ந்தாஉங்கள   எப்பிடி கூப்பிடிறது...?????   

சிந்தனைகள் நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்...
அதற்காக இப்படியா......?????

                                                          - இணையத்தேடல்களுடன் எனது பதிப்பும்.

3 comments:

  1. superda...சிந்திக்க வேண்டிய விடயம் தான் இது...

    ReplyDelete
  2. machan whn i was readin it, i really imagined those characters as u, ur wife and ur children. Just perfect future for u. hahaha

    ReplyDelete
  3. jst thnk abt it as u r trin 2 talk to a lady....

    ReplyDelete